News April 18, 2025

புதுச்சேரி: ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு

image

இந்திய ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRBs) சார்பில் தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 510 உதவி லோகோ பைலட் (ALP) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. டிப்ளமோ, பி.ஈ/பி.டெக் முடித்த 18 முதல் 30 வயதுக்குட்பட்ட நபர்கள் <>rrbchennai.gov.in<<>> என்ற இணையதளம் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 11.05.2025. மத்திய அரசு வேலை தேடும் நபர்களுக்கு இதை ஷேர் செய்யவும்.

Similar News

News July 5, 2025

புதுவையில் பெண் தூய்மை பணியாளர் தற்கொலை

image

புதுவை, சூரமங்கலம் பள்ளிக்கூட வீதியைச் சேர்ந்த ஒப்பந்த தூய்மை பணியாளர் தனலட்சுமி. இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு, மாத்திரை வாங்கி சாப்பிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வயிற்று வலி அதிகமானதால், இரவு நேரத்தில் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக, அவரது மகன் பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News July 5, 2025

திருநள்ளாறு அனைத்து பகுதிகளிலும் இன்று மின் தடை

image

திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட செல்லூர் நல்லம்பல் சுரக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று (ஜூலை 5) சனிக்கிழமை காலை 10.30 am முதல் 12.30 am வரை சுரக்குடி துணை மின் நிலையத்தில் அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்சாரம் மேற்கண்ட நேரத்தில் இருக்காது என திருநள்ளாறு மின்துறை அலுவலகம் அறிவித்துள்ளது.

News July 4, 2025

சொர்ணவாரி பட்டத்தில் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

image

புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்தாண்டு, சொர்ணவாரி நெற்பயிர் பட்டத்திற்கு கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை விதை விதைத்து, பயிர் செய்த விவசாயிகள் இந்த மாதம் 15ம் தேதிக்குள், பயிர்க் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்.பொதுச் சேவை மையத்தில், தகவல்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.” என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!