News April 18, 2025
பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதை கண்டறிந்த தமிழர்!

கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தவர் நிக்கு மதுசூதன் என்னும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் ‘Astrophysics & Exoplanetary Science’ பிரிவில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான குழுதான் James Webb தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளது. IIT-ல் பி.டெக் பட்டம் பெற்ற நிக்கு, Massachusetts யூனிவர்சிட்டியில் PhD முடித்துள்ளார்.
Similar News
News November 8, 2025
6 கிலோவில் பிறந்த அதிசய குழந்தை PHOTO ❤️❤️

பிறந்த குழந்தைகள் சராசரியாக 3 கிலோ வரை இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால், ஆஸ்திரேலியாவில் அதற்கு டபுள் மடங்காக 6 கிலோவில் குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார் பெண் ஒருவர். பெரிய சைஸில் இருக்கும் அந்த பச்சிளம் குழந்தையின் போட்டோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரசவத்தின்போது அதிக வலி ஏற்பட்டதாகவும், தான் பிழைக்கமாட்டேன் என எண்ணியதாகவும் குழந்தையின் தாய் தெரிவித்துள்ளார்.
News November 8, 2025
தினமும் இந்த பழங்களை சாப்பிடலாம்

இந்தப் பழங்கள் வெறும் சுவையானவை மட்டுமல்ல, உங்கள் உடல் விரும்பும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களால் நிரம்பியுள்ளன. என்னென்ன பழங்கள், நம் அன்றாட ஆரோக்கியத்தில் பங்களிக்கின்றன என்று மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் பண்ணுங்க. SHARE பண்ணுங்க. இவை தகவலுக்காக மட்டுமே. ஆலோசனை தேவைப்பட்டால் மருத்துவ நிபுணரை அணுகவும்.
News November 8, 2025
BREAKING: துரைமுருகன் விலகலா..?

திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து துரைமுருகன் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக் குறைவு, வயது மூப்பு காரணமாக அவர் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது. அவரது விலகலுக்கு பிறகு ஜெகத்ரட்சகனுக்கு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட இருப்பதாகவும் அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி, மேலும் 2 பேரை துணை பொதுச்செயலாளராக்கவும் திமுக திட்டமிட்டு வருகிறதாம்.


