News April 18, 2025

பூமிக்கு வெளியே உயிரினங்கள் இருப்பதை கண்டறிந்த தமிழர்!

image

கே2-18பி கோளில் உயிரினங்கள் இருப்பதற்கான ஆதாரங்களை கண்டறிந்தவர் நிக்கு மதுசூதன் என்னும் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர். இவர் கேம்பிரிட்ஜ் யூனிவர்சிட்டியில் ‘Astrophysics & Exoplanetary Science’ பிரிவில் பேராசிரியராக பணிபுரிகிறார். இவர் தலைமையிலான குழுதான் James Webb தொலைநோக்கி மூலம் இதனை கண்டுபிடித்துள்ளது. IIT-ல் பி.டெக் பட்டம் பெற்ற நிக்கு, Massachusetts யூனிவர்சிட்டியில் PhD முடித்துள்ளார்.

Similar News

News January 13, 2026

மோடி முன்னிலையில் ஜி.வி.பிரகாஷ் பாடல் ரிலீஸ்!

image

டெல்லியில் PM மோடி முன்னிலையில் திருவாசகத்தின் முதல் பாடலை தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நாளை இசைக்க உள்ளார். மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்கும் ஜிவி பிரகாஷ் தனது இசை கச்சேரியில் இதனை நிகழ்த்த உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏழை தாயின் மகன் என்ற மோடியின் 75வது பிறந்தநாள் பாடலுக்கு அவர் இசையமைத்திருந்தது கவனிக்கத்தக்கது.

News January 13, 2026

பிரபல பாடகர் காலமானார்.. கண்ணீர் அஞ்சலி

image

பிரபல பாடகர் சமர் ஹசாரிகா (75) உடல்நலக் குறைவால் காலமானார். அசாம் திரையுலகில் பின்னணி பாடகராக கொடி கட்டி பறந்த இவர், பாரத ரத்னா பெற்ற பூபன் ஹசாரிகாவின் சகோதரர் ஆவார். தமிழ் திரையுலகில் கோலோச்சிய SPB போல, அசாமில் புகழ்பெற்று இருந்துள்ளார். அம்மாநில கலாசாரத்தை போற்றும் வகையில் பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News January 13, 2026

செல்வப்பெருந்தகை மதிப்பு இழந்து வருகிறார்: தமிழிசை

image

விஜய் விவகாரத்தில் பாஜக தலையிடுவதாக செல்வப்பெருந்தகை சொல்வதில் அர்த்தமே இல்லை என தமிழிசை கூறியுள்ளார். மேலும், கூட்டத்தில் சிக்கி ஒரு உயிரிழப்பு ஏற்பட்டதற்காக தெலங்கானாவில் ஒரு நடிகரை காங்கிரஸ் CM கைது செய்தார். ஆனால் விஜய்க்காக பேசி இங்குள்ள காங்., தலைவர் செல்வப்பெருந்தகை குளிர்காய்கிறார் என்றும், கட்சிக்குள் தனது முக்கியத்துவத்தை இழந்து வருவதால் அவர் இப்படி பேசுவதாகவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!