News April 18, 2025
தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் சாகச விளையாட்டுகள்

சட்டப்பேரவையில் சுற்றுலா துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் ராஜேந்திரன் நேற்று பதில் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு, முள்ளகாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நீர் சாகச விளையாட்டுகள் உள்ளிட்ட சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்தார். இந்த அறிவிப்பால் தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்கின்றனர்.
Similar News
News October 31, 2025
தூத்துக்குடி: கிராமப்புற வங்கியில் வேலை! உடனே APPLY

தூத்துக்குடி மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12வது தேர்ச்சி பெற்ற 18 – 33 வயதுகுட்பட்டவர்கள் <
News October 31, 2025
தூத்துக்குடி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்?

கோரம்பள்ளத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் வைத்து நேற்று பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்குவது சம்பந்தமாக ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
News October 31, 2025
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்திற்கு விருது

ஒன்றிய அரசின் துறைமுகம் கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை சார்பில் அக்டோபர் 27 முதல் 31 வரை நீர்வழி போக்குவரத்து வார விழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வில் ‘பசுமை தொலை நோக்கு’ விருதை தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் வென்றது. மேலும், இதில் மூன்று முன்னணி நிறுவனங்களுடன் 42 ஆயிரம் கோடி மதிப்புள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.


