News April 18, 2025
8வது இடம் பிடித்த விருதுநகர் – 304 மாணவர்கள் தேர்ச்சி

மத்திய அரசால் தேசிய திறனாய்வு தேர்வு 8ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெரும் மாணவர்களுக்கு 9 முதல் 12 ஆகிய வகுப்புகளுக்கு மாதம் தோறும் ரூ1000 வழங்கப்படும் இந்த ஆண்டுக்கான தேர்வில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 6,300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 304 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் மாநில அளவில் விருதுநகர் மாவட்டம் 8வது இடத்தை பிடித்துள்ளது.
Similar News
News November 3, 2025
விருதுநகர்: டிகிரி தகுதி.. 5,810 ரயில்வே காலியிடங்கள்

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் <
News November 3, 2025
சாத்தூர்: கண்மாயில் மூழ்கி ஒருவர் பலி

வெம்பக்கோட்டை அருகே மீனாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (63). கூலி தொழிலாளியான இவர் அருகில் உள்ள கோட்டை கண்மாயில் குளித்துவிட்டு வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாக வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய உறவினர்கள் தேடி வந்தனர். இதற்கிடையில் அவர் கண்மாயில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. உடலை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 3, 2025
விருதுநகர்: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100% முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) விருதுநகர் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க


