News April 18, 2025
கள்ளக்குறிச்சியில் இளைஞர் தற்கொலை

ராஜஸ்தான் மாநிலம், இந்திரானா பகுதியை சேர்ந்த மால்சிங் மகன் சந்தன்சிங்,(18). இவர் கள்ளக்குறிச்சி, துருகம் சாலையில் உள்ள ஸ்டிக்கர் கடையில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு, அவர் தங்கியிருந்த வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
Similar News
News August 20, 2025
கள்ளக்குறிச்சி: சி.இ.ஓ புதிய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலைப்பள்ளிகளில் வருகின்ற 29ஆம் தேதிக்குள் சர்வதேச கூட்டுறவு ஆண்டை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக 1முதல் 9வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவு சார்ந்த கதை சொல்லல், கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்திட தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சிஇஓ கார்த்திகா இன்று சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.
News August 20, 2025
கள்ளக்குறிச்சி: 4 மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் ஒழுங்கீனமாக மது அருந்திவிட்டு ஆசிரியர்களிடம் 11ஆம் வகுப்பை சேர்ந்த 4மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களுக்கு நேற்று தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு SMC பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் (PTA) ஆலோசனை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாற்று சான்றிதழ் (TC) வழங்கப்பட்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.
News August 20, 2025
கள்ளக்குறிச்சி: விவசாயிகளுக்கு ரூ. 2.10 லட்சம் மானியம்

விவசாயத்தில் கால்நடைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு இலவச மாட்டு கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.. <<17460294>>தொடர்ச்சி<<>>