News April 18, 2025

நடந்து சென்ற தொழிலாளி மீது கார் மோதி பலி

image

போடி அருகே ராசிங்காபுரம் அழகர் கோயில் தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் 42. கூலித் தொழிலாளி இவரும் அதே பகுதியை சேர்ந்த கதிரேசன் என்பவரும் தேவாரம் செல்லும் மெயின் ரோட்டில் நேற்று நடந்து சென்றுள்ளனர். பின் பக்கமாக அதிவேகமாக கார் முன்னாள் சென்ற இளங்கோவன், கதிரேசன் மீதும் மோதியதில் சிகிச்சை பலனின்றி இளங்கோவன் இறந்தார். உரிய நிவாரணம் வழங்க கோரி ராசிங்காபுரம் ரோட்டில் உறவினர்கள் ரோடு மறியலில் ஈடுபட்டனர்.

Similar News

News November 14, 2025

வாக்காளர்களுக்கு உதவி மையம்: கலெக்டர் தகவல்

image

வாக்காளர்களுக்கு சேவை செய்யும் பொருட்டு உதவி மைய முகாம்களானது தேனி மாவட்ட நிர்வாகத்தினால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணியில் ஈடுபட்டுள்ள 1226 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம், வாக்காளர்கள் தங்களது பகுதிகளிலே ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையங்களுக்கு சென்று கணக்கெடுப்பு படிவத்தினை பூர்த்தி செய்யும் அலுவலர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 13, 2025

கூடுதல் வாகனங்களை துவக்கி வைத்த தேனி எஸ்.பி

image

தேனி மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் புகார் அழைப்புகளை உடனடியாக அணுகி தீர்வு காணவும், காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஏற்படும் விபத்துக்கள், மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு உடனடியாக விரைந்து சென்று தீர்வு காணும் வண்ணம் 8 கூடுதல் நான்கு சக்கர ”Quick Reaction Team” வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேஹ ப்ரியா துவக்கி வைத்தார்.

News November 13, 2025

தேனியில் இந்த புகார்களுக்கு Police Station செல்ல வேண்டாம்.!

image

தமிழக காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாஸ்போர்ட், ஆர்.சி புத்தகம் , ஓட்டுனர் உரிமம், அடையாள அட்டை, school & college certificate இவற்றில் ஏதேனும் ஆவணங்கள் தொலைந்து போனால் காவல் நிலையத்தை அணுக வேண்டிய அவசியமில்லை <>eservices.tnpolice.gov.in<<>> என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!