News April 18, 2025

கோவை: மகனை வெட்டி கொன்ற தந்தை கைது

image

கோவை குனியமுத்தூர் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் விஸ்வநாதன் (57). இவர் மகன் விஜயகுமார் (27). மதுப்பழக்கத்திற்கு அடிமையான விஜயகுமார், மது அருந்தி விட்டு வந்து அடிக்கடி வீட்டில் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் நேற்றிரவும் விஜயகுமார் மதுபோதையில் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விஸ்வநாதன், அரிவாளால் கழுத்தில் வெட்டியதில், விஜயகுமார் பலியானார். பின்னர் போலீசார் விஸ்வநாதனை கைது செய்தனர்.

Similar News

News August 22, 2025

அறிவித்தார் கோவை கலெக்டர்!

image

கோவை: தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) கோயம்புத்தூர் – பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 270-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளனர். இதில் , 8 மற்றும் 10-ம் வகுப்பு,ஐடிஐ, இன்ஜினியரிங்,டிகிரி, செவிலியர்கள் என அனைத்துத் தரப்பினரும் கலந்துகொள்ளலாம் என கலெக்டர் பவன்குமார் தெரிவித்துள்ளார். SHAREIT

News August 22, 2025

பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி சேர்க்கை

image

கோவை பேரூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் Advanced CNC, Aeronautical Structure, Multimedia போன்ற பிரிவுகளில் நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டது. 8ம் மற்றும் 10ம் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கட்டுமான தொழிலாளர் நலவாரிய அட்டை அவசியம். இலவச சைக்கிள், பாடநூல்கள், உதவித்தொகை ரூ.750 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு என்ற 88254 34331, 9566531310 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News August 21, 2025

கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

கோவை மாவட்டத்தில் இன்று (21.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!