News April 18, 2025
புதுவை இ.சி.ஆரில் பைக் மோதி பெண் பலி

புதுவை பெரிய காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் நேற்று காலை அவரது வீட்டிற்கு அருகேயுள்ள மளிகை கடைக்கு சென்றுள்ளார். மீண்டும் வீட்டிற்கு திரும்பியபோது இ.சி.ஆர் சாலையை சுந்தரி கடக்க முயன்றுள்ளார். அப்போது அவ்வழியாக அதிவேகமாக வந்த பைக் அவர் மீது மோதியதால் படுகாயமடைந்த சுந்தரி உயிரிழந்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
புதுவை: போஸ்ட் ஆபீஸில் வேலை!

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.15-க்கு பிறகு <
News January 8, 2026
புதுவை: கால்நடை உரிமையாளர் மீது வழக்கு

நிரவி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வீரன்கோவில் தெரு அருகே ரோந்து சென்றார். அப்போது போக்குவரத்துக்கு இடையூறாக பைபாஸ் சாலை சந்திப்பில்
மாடு ஒன்று சுற்றித்திரிந்தது. அதுபற்றி விசாரித்ததில், மேலஓடுதுறையைச் சேர்ந்த சுப்பிரமணியன் (70) என்பவரின் மாடு என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
News January 8, 2026
புதுவை: கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது

கோரிமேடு உதவி ஆய்வாளர் கோவிந்தன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இருசக்கர வாகனத்தில் 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக அந்த வழியாக வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சாரம் முத்துரங்கசெட்டி நகரைச் சேர்ந்த புவேனேஷ் (24), முதலியார்பேட்டையைச் சேர்ந்த பாலா (23) என்பதும்; அவர்களிடம் கஞ்சா இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.


