News April 18, 2025

துக்க வீட்டில் மீண்டுமொரு துக்கம்

image

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை, கூத்தாண்டகுப்பம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் (45). இவரது பெரியப்பா மகள் கடந்த வாரம் உயிரிழந்த நிலையில் காரியம் முடிந்து கோவிலில் வழிபாடு செய்ய குடும்பத்துடன் வந்துள்ளார். கனகநாச்சியம்மன் கோவிலில் சடங்குகளை முடித்துவிட்டு தடுப்பணையில் குளிக்க சென்ற போது சண்முகம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.தகவலறிந்த தீயணைப்பு துறையினர் 5 மணி நேரத்திற்கு மேல் போராடி உடலை மீட்டனர்.

Similar News

News January 19, 2026

திருப்பத்தூர்: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

image

திருப்பத்தூர் மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 19, 2026

திருப்பத்தூர் மாவட்ட புதிய காங்கிரஸ் தலைவர் நியமனம்

image

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.பி ஜெயமோகன் மகன் விஜய் இளஞ்செழியன் திருப்பத்தூர் மாவட்ட தலைவராக நேற்று (ஜனவரி 18) மாலை நியமிக்கப்பட்டார். இவருக்கு ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.

News January 19, 2026

திருப்பத்தூர்: பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் பகுதியை சேர்ந்தவர் பூர்ணிமா (45). இவர் அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (ஜன.18) குடும்ப பிரச்சனை காரணமாக தனது வீட்டில் பூர்ணிமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!