News April 18, 2025
லாரி மோதி ஒருவர் பலி

செங்கல்பட்டு, பெரும்பேர்கண்டிகையை சேர்ந்தவர் சரவணன் (47). இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேல்மருவத்துாரில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றார். அப்போது அச்சிறுபாக்கம் அருகே முன்னால் சென்ற லாரியை முந்திச் செல்ல முயன்ற போது லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி பலியானார். போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.
Similar News
News September 18, 2025
செங்கல்பட்டு: பெரியாருக்கு முன்பே சமூக மாற்றம்

சாதிய முறைகளுக்கு எதிராக அம்பேத்கர், பெரியாருக்கு முன்பே சமூக மாற்றத்திற்கு வித்திட்டவர் இரட்டைமலை சீனிவாசன். 1860 ஜூலை 7ல் செங்கல்பட்டு மாவட்டம் கோழியாளத்தில் பிறந்து தமிழ்நாட்டில் மேற்கத்திய கல்வி முறையில் பட்டம் பெற்ற முதல் தாழ்த்தபட்ட சமூக பிரதிநிதியாக, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடி ஆதிதிராவிட நலப்பள்ளிகள், விடுதிகள், உதவித்தொகை கிடைக்க செய்தார். இவரின் நினைவு தினம் இன்று.
News September 18, 2025
செங்கல்பட்டு: ட்ரெண்டாகும் AI புகைப்படம் எச்சரிக்கை!

செங்கல்பட்டு மக்களே Google Gemini பெயரில் வைரலாகும் Nano Banana Al ட்ரெண்ட் தொடர்பாக, தனிப்பட்ட தகவல்கள் மற்றும் புகைப்படங்களை போலியான இணையதளங்கள் அல்லது செயலிகளில் பதிவேற்ற வேண்டாம். ஒரே கிளிக்கில் உங்கள் வங்கிகணக்கு போன்ற தனிநபர் விபரங்கள் திருடப்படலாம் என சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இதனை அனைவருக்கும் SHARE செய்யுங்கள்.
News September 18, 2025
செங்கல்பட்டு: யூடியூபர் வராகி மீது 2 வழக்குகள் பதிவு

பிரபல யூடியூபர் வராகி, அரசு மருத்துவமனை முன்னாள் முதல்வர் தேரணிராஜன் மற்றும் நடிகர் விஷால் குறித்து தனது “(X)” தளத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததன் காரணமாக 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்தாண்டு செங்கல்பட்டு சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் வாராகி மீது மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.