News April 4, 2024
BREAKING: வீடு வீடாக வருகிறார்கள்

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலையொட்டி, முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது. துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் தபால் வாக்குகளை சேகரிக்கின்றனர் . ஏப்.6 வரை 3 நாட்களுக்கு காலை 7 – மாலை 6 மணி வரை வீடு வீடாகச் சென்று தபால் வாக்கு சேகரிக்கப்பட உள்ளது. தபால் வாக்கு செலுத்த முடியாதவர்களுக்கு ஏப்.8ஆம் தேதி மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும்.
Similar News
News November 10, 2025
RR அணியின் புதிய கேப்டன் யார்?

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனை டிரேட் மூலம் CSK வாங்கவுள்ளதாக காட்டுத்தீ போல செய்தி பரவி வருகிறது. அப்படி சென்னைக்கோ, வேறு அணிக்கோ சஞ்சு சென்றால் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுகிறது. ஜெய்ஸ்வால் (அ) துருவ் ஜுரலை கேப்டனாக நியமிக்க, RR அணி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தமுறை சில போட்டிகளில் கேப்டனாக செயல்பட்ட ரியான் பராக் பெயர் பரிசீலனையில் இல்லை எனவும் கூறப்படுகிறது.
News November 10, 2025
உங்களுக்கும் இப்படி போன் வருதா.. உஷாரா இருங்க!

செல்போன் எண்ணை ஆதாருடன் இணைக்காவிட்டால், மொபைல் எண் பிளாக் செய்யப்படும் என மிரட்டி, சைபர் குற்றவாளிகள் போன் செய்து, பணத்தை சுருட்டி வருகின்றனர். இந்த கும்பலிடம் ஜாக்கிரதையாக இருக்கும் படி, PIB Fact Check அறிவுறுத்தியுள்ளது. டெலிகாம் அதிகாரிகள் இப்படி போன் செய்வதில்லை என்றும், அழைப்பு வந்தால் cybercrime.gov.in அல்லது 1930 என்ற எண்ணில் புகார் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் பகிருங்கள்.
News November 10, 2025
‘அம்மா SORRY.. என் சாவுக்கு இவர்கள்தான் காரணம்’

‘அம்மா என்னை மன்னித்துவிடு. என் கணவன் விரும்புவது என் உடலை மட்டுமே, மனதை அல்ல. என் சாவிற்கு மாமனார், மாமியார் உள்ளிட்டோர்தான் காரணம்’. கேரளாவில் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்த ரேஷ்மாவின் கடைசி வரிகள் இவை. திருமணத்தின்போது வரதட்சணையாக கொடுத்த நகைகளை தனது பெற்றோரிடம் திரும்பிக் கொடுக்க வேண்டும் என கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது.


