News April 18, 2025
திமுக கூட்டணியில் சலசலப்பு

பொன்முடி மீது CM ஸ்டாலின் இன்னும் கடுமையான நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும் என கூட்டணி கட்சி எம்பியான கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஒரு பேராசியர் இப்படி மோசமாக பேசியிருக்க கூடாது. அவரின் கட்சி பதவியை மட்டும் பறித்தது பத்தாது என்பது பலரின் கருத்து. அது நியாயமான ஒன்றுதான். அதையே நானும் கூறுகிறேன் எனத் தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் பேச்சால் கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News November 8, 2025
தமிழகம் முழுவதும் தியாகச் சுவர்: அமைச்சர் மா.சு

உடல் உறுப்பு கொடையாளர்களை போற்றும் வகையில் தமிழ்நாடு முழுவதும் தியாகச் சுவர் எழுப்பப்படும் என்று அமைச்சர் மா.சு., தெரிவித்துள்ளார். CM ஸ்டாலின் எந்த ஒன்றையும் சொல்வதற்கு முன்னால் தாமே செய்து காட்டும் மிகச் சிறந்த மானுடப் பண்பில் உயர்ந்தவர்; அந்த வகையில் ஸ்டாலின் 2009-ம் ஆண்டே உடல் உறுப்பு தானம் செய்துள்ளார். இதுபோன்று ஒவ்வொருவரும் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
News November 8, 2025
ஆம்னி பஸ்கள் எல்லையில் நிறுத்தம்.. பயணிகள் அவதி!

TN ஆம்னி பஸ்களுக்கு கேரளாவில் ₹70 லட்சம் அபராதம் விதித்ததால் ஆம்னி பஸ் உரிமையாளர்கள் நேற்று மாலை முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கோவை, நெல்லை, குமரி மாவட்ட எல்லைகளில் சுமார் 200 ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. சபரிமலை சீசன் என்பதால் பொதுமக்கள், பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சில பயணிகள் கட்டணத்தை திருப்பி கேட்டு பஸ் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
News November 8, 2025
எளியோருக்கு அருமருந்தாகும் எருக்கு மூலிகை

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது. ➤செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் ➤செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் ➤இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.


