News April 17, 2025
9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக IMD தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News September 16, 2025
மேகாலயாவில் 8 அமைச்சர்கள் ராஜினாமா

மேகாலயா அமைச்சரவையில் மாற்றம் நிகழவுள்ளதால் அதற்கு ஏதுவாக, 8 அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். அம்மாநிலத்தின் முதல்வர் கான்ராட் சங்மா தலைமையிலான அமைச்சரவையில், 8 புதிய அமைச்சர்கள் ராஜ் பவனில் மாலை 5 மணிக்கு பதவியேற்க உள்ளனர். இந்நிலையில், அமைச்சரவையில் இருந்து மாற்றப்பட்ட அமைச்சர்கள் கவர்னரிடம் ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
News September 16, 2025
துணை ஜனாதிபதியை சந்தித்தார் இபிஎஸ்

டெல்லியில் துணை ஜனாதிபதியை இபிஎஸ் சந்தித்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில், சிபி ராதாகிருஷ்ணனுக்கு பூங்கொத்து கொடுத்து துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு இபிஎஸ் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பில் கே.பி.முனுசாமி, வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்ட அதிமுக மூத்த தலைவர்கள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து இரவு 8 மணி அளவில் அமித்ஷாவை இபிஎஸ் சந்திக்க உள்ளார்.
News September 16, 2025
யுவராஜ், உத்தப்பாவுக்கு ED சம்மன்!

சட்ட விரோத சூதாட்ட விளம்பர வழக்கில் முன்னாள் கிரிக்கெட்டர்கள் யுவராஜ் சிங் & ராபின் உத்தப்பாவுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. அதில், உத்தப்பா வரும் 22-ம் தேதியும், யுவராஜ் சிங் வரும் 23-ம் தேதியும் நேரில் ஆஜராகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கில் வீரர்கள் சுரேஷ் ரெய்னா & ஷிகர் தவான் உள்பட நடிகைகள் மிமி சக்ரபோர்த்தி, ஊர்வசி ஆகியோரும் விசாரிக்கப்பட்டிருந்தனர்.