News April 17, 2025
வராக ஜெயந்திக்கு இதை மறக்காதீங்க

இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்த இந்த பூமியை காக்க விஷ்ணு பகவான் எடுத்த மூன்றாவது அவதாரம் தான் வராக அவதாரம். நாளை வராக ஜெயந்தி திதி வர உள்ளது. இந்நாளில் ஸ்ரீ முஷ்ணம் பூவராகவரை வழிபட்டால் பெயர், புகழ், அந்தஸ்து, ஆயுள் ஆரோக்கியம், ஐஸ்வரியம் இவை எல்லாம் கிடைக்கும் என்பது ஐதீகம். அப்படி இல்லையெனில் வீட்டிலேயே பெருமாள் படத்திற்கு விளக்கு ஏற்றி வழிபடலாம். உங்கள் உறவினருக்கும் ஷேர் செய்யுங்கள்..
Similar News
News October 31, 2025
கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

நெய்வேலி 17-வது வட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (36). இவர் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில், கடலூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிந்து ரூ.20 லட்சம் மோசடி செய்த மணிகண்டனை கைது செய்தனர்.
News October 31, 2025
கடலூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!
News October 31, 2025
கடலூர் அருகே மின்சாரம் தாக்கி பரிதாப பலி

கம்மாபுரம் அடுத்த கத்தாழை கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (70). இவர் அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று பகல் 2 மணியளவில் வயலுக்கு சென்ற முதியவர் அருகில் உள்ள நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


