News April 17, 2025

₹5,979 கோடி.. இந்திய ஏவுகணைக்கு ரேட்!

image

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணையை ₹5,979 கோடிக்கு வியட்நாம் வாங்க உள்ளது. இதுதொடர்பான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வரும் மாதங்களில் இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது. தென்சீனக் கடலில் சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க வியட்நாம் ஏவுகணைகளை வாங்குகிறது. முன்னதாக, ₹3203 கோடிக்கு பிலிப்பைன்ஸ் இந்த ஏவுகணையை இந்தியாவிடம் இருந்து வாங்கியது.

Similar News

News January 13, 2026

விஜய்க்கு மீண்டும் அதிர்ச்சி.. சுடச்சுட தகவல்

image

டெல்லியில் CBI விசாரணையை முடித்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டார் விஜய். புஸ்ஸி ஆனந்த், நிர்மல், ஆதவ்விடம் 3 நாள்கள் CBI விசாரணை நடைபெற்ற நிலையில், விஜய் கேட்டுக் கொண்டதால், ஒரு நாளோடு விசாரணை முடிந்தது. இந்நிலையில், ஜன.19-ல் ஆஜராகும்படி விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பவுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சென்னைக்கு வந்ததும் வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் உடனடி ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.

News January 13, 2026

சபரிமலையில் நாளை மகரஜோதி!

image

சபரிமலை, மகரவிளக்கு சீசனின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. ஜோதி வடிவில் காட்சி தரும் ஐயப்பனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மகரவிளக்கை முன்னிட்டு, இன்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை 45,000 ஆக குறைக்கப்பட்ட நிலையில், நாளை 30,000 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

News January 13, 2026

Night முழுக்க சார்ஜ் போடுறீங்களா? உஷார்!

image

காலையில் எழுந்ததும் 100% சார்ஜ் இருக்கணும் என எண்ணி, இரவு முழுவதும் போனை சார்ஜ் போடுகிறோம். அப்படி செய்வதால் பேட்டரியின் செயல்திறன் குறையுமாம். தற்போது, போன்களில் இருக்கும் லித்தியம்-அயன் பேட்டரி நவீனரகம் என்றாலும், அதன் செயல்திறனுக்கும் ஓர் எல்லை உண்டு. நீண்ட நேரம் போன் சார்ஜில் இருந்தால், செயல்திறன் பாதிப்பதோடு, சமயங்களில் பேட்டரி சூடாகி, வெடிப்பதற்கான சாத்தியங்களும் உள்ளன. SHARE.

error: Content is protected !!