News April 17, 2025
கொளுத்தும் வெயில்.. அம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி?

உடல் சூட்டை தணிப்பது அம்மை நோயை வராமல் தடுக்கும் *வாரம் 3 நாள்கள் தலைக்குக் குளிக்கலாம் *வெறும் தண்ணீர் குடிக்காமல், எலுமிச்சை சாறு, நன்னாரி போன்றவற்றைச் சேர்க்கலாம் *தாழம்பூவுக்கு அம்மையைத் தடுக்கும் குணம் உண்டு. டாக்டர்களின் ஆலோசனையோடு தாழம்பூ மணப்பாகு எடுத்துக்கொள்ளலாம். குளிக்கும் நீரில் வேப்பிலையும் மஞ்சளும் சேர்த்து குளிக்கலாம் *இளநீர், கரும்பு ஜூஸ், பனஞ்சாறு குடிக்கலாம். SHARE IT.
Similar News
News November 1, 2025
MP கார்த்தி சிதம்பரத்துக்கு வந்த சிக்கல்!

INX மீடியா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் டெல்லியிலுள்ள ₹16 கோடி சொத்துகளையும், 7 வங்கி கணக்கில் இருந்த சுமார் ₹7 கோடி பணத்தையும் முடக்கி ED நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் PMLA தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தார். விசாரணை முடிவில், சொத்துகளை முடக்கிய ED நடவடிக்கை செல்லும் என்று கூறி, கார்த்தி சிதம்பரத்தின் வாதத்தை தள்ளுபடி செய்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
News November 1, 2025
அதிசயமே அசந்து போகும் அழகி ஐஸ்வர்யா ராய்!

8-வது உலக அதிசயம் என கொண்டாடப்படும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று பிறந்தநாள். 1994-ல் உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட அவர், சினிமாவிலும் உச்சம் தொட்டார். அழகான ஹீரோயினாக மட்டுமின்றி, ஒரு நெகட்டிவ் கதாபாத்திரத்தையும் இத்தனை தேஜஸுடன் நடிக்க முடியும் என பொன்னியின் செல்வன் படத்தில் நிரூபித்து காட்டி, ரசிகர்களை அசத்தினார். உங்களுக்கு பிடிச்ச ஐஸ்வர்யா ராய் படம் எது?
News November 1, 2025
வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ₹2.5 கோடி ஷேர்

‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்ததாம் கல்யாணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ற சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. தாத்தா இறந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பேரனுக்கு ₹2.5 கோடிக்கான பங்கு சான்றிதழ்கள் கிடைத்தது. தாத்தா உயிலில் சொத்துகளை பேரன் பெயரில் எழுதி வைத்தாலும், தனக்கும் பங்கு வேண்டும் என தாத்தாவின் மகன் கோருகிறார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், இருவரும் கோர்ட்டை நாடியுள்ளனர்.


