News April 17, 2025

ரூ. 8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

image

நாகையை சேர்ந்தவர் அலெக்ஸ், இவர் மீது, ஏற்கனவே போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் நாகையில் இருந்து புதுக்கோட்டை வந்த அலெக்ஸை போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 95 கிராம் மெத்த பெட்டமைன் என்ற போதை பொருள் மற்றும் ரூ.2 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அப்போதை பொருளின் மதிப்பு ரூ.8 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது

Similar News

News January 19, 2026

நாகை: இனி வாட்ஸ்ஆப் மூலம் சான்றிதழ்கள்!

image

நாகை மக்களே பிறப்பு/இறப்பு சான்றிதழ், வருமான சான்று, பட்டா, சொத்துவரி, வேளான் திட்டங்கள், மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் மின்சாரக் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அரசு சேவைகளை இனி வாட்ஸ்அப் மூலமாகவே எளிதாகப் பெறலாம். இதற்கு உங்களது வாட்ஸ்ஆப்பில் இருந்து ‘78452 52525’ என்ற எண்ணிற்கு ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும். இத்தகவலை தெரிந்துகொள்ள அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 19, 2026

நாகை: பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு!

image

நாகை மக்களே.. நீங்க வசிக்கிற இடத்தில் தெரு விளக்கு, மின்சாரம், சாலை சேதம், மருத்துவமனை, கழிவுநீர், குடிநீர், வீடு தொடர்பாக உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை உள்ளதா? கவலை வேண்டாம். உங்கள் மாவட்டம், ஊர் பெயருடன் சேர்த்து பிரச்சனையை போட்டோவுடன் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து பதிவிட்டால் போதும். பேரிடர் மேலாண்மை துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.!

News January 19, 2026

நாகை மாவட்ட ஆட்சியர் அறிவுரை

image

நாகை மாவட்டத்தில் புகையான் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்த நெல் வயல்களில் 8 அடிக்கு 1 அடி பட்டம் பிரித்து விட வேண்டும். வயலில் உள்ள தண்ணீரை உடனடியாக வடிகட்டுதல், தேவைக்கு அதிகமாக யூரியா இடுவதை தவிர்த்தல், வேப்ப எண்ணெய் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகளை 1 லி தண்ணீருக்கு 3 மி.லி என்ற வீதத்தில் கலந்து தெளித்து புகையான் தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!