News April 17, 2025

ஈரோடு: தொழில் நஷ்டத்தால் ஒருவர் தற்கொலை!

image

ஈரோடு ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ ரங்கா வீதியை சேர்ந்தவர் கதிர்வேல் (72). ஜவுளி தொழில் செய்து வந்த இவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக, மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, கத்தியை எடுத்து தனக்குத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.  ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். 

Similar News

News September 18, 2025

ஈரோட்டில் கொட்டிக் கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

image

ஈரோடு மக்களே.., நீங்கள் வேலை தேடுபவரா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. அரசு ஐடிஐ வளாகத்தில் நாளை(செப்.19) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 100க்கும் மேற்பட்ட காலியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறுத்து மேலும் விவரங்களுக்கு 8675412356 எண்ணை அணுகவும். பதிவு செய்ய <>இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. (SHARE IT)

News September 18, 2025

ஈரோடு: பெண் தூக்கிட்டு தற்கொலை!

image

ஈரோடு: கனகபுரம் கொமராபாளையத்தை சேர்ந்த குமாரின் மனைவி பாப்பாத்தி (54). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனால் மனஉளைச்சல் அடைந்த அவர் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அறச்சலூர் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

News September 18, 2025

ஈரோடு: இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

ஈரோடு மாவட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து இன்று செப்டம்பர் 18 அன்று பவானி கோபி நம்பியூர் பெருந்துறை தாளவாடி போன்ற பகுதிகளில் நடைபெறுகிறது. எனவே மக்கள் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை அதிகாரிகளிடம் வழங்கி பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கின்றது.

error: Content is protected !!