News April 17, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை. ▶குறள் எண்: 309 ▶குறள்: உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி எனின். ▶பொருள்: உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.
Similar News
News November 7, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை வெளுக்கப் போகுது

வங்கக்கடலில் அடுத்தடுத்து 2 குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதனால் நவ.15-ம் தேதிக்கு பிறகு வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. IMD தகவலின்படி இன்று ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. எனவே, வெளியே சென்றால் குடையுடன் செல்லுங்கள்.
News November 7, 2025
இன்று 9.50 மணிக்கு ‘வந்தே மாதரம்’ பாடுங்க: மத்திய அரசு

தேச உணர்வூட்டும் வந்தே மாதரம் பாடலை இன்று காலை 9.50 மணி அளவில் பொதுமக்கள் பாட வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 1875-ல் வங்க எழுத்தாளர் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலில் இப்பாடல் இடம்பெற்றது. இன்று, அதன் 150-வது ஆண்டை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி நினைவு அஞ்சல் தலை மற்றும் நாணயத்தை PM மோடி வெளியிடுகிறார்.
News November 7, 2025
தேனில் ஊறவைத்த நெல்லிக்காயின் நன்மைகள்!

தேனில் ஊறவைத்த நெல்லிக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பல வித உடல்நல பிரச்னைகளுக்கு இது சுவையான தீர்வாக அமையும் என்றும் கூறப்படுகிறது. இதை சாப்பிட்டால் உடலுக்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.


