News April 16, 2025
அவுரங்கசீப்பிற்காக ஐநாவை நாடிய முகலாய வாரிசு

இந்தியாவின் கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷாவின் வழித்தோன்றல் எனக் கூறிக்கொள்ளும் யாகூப் ஹபீபுதீன், அவுரங்கசீப் கல்லறையை பாதுகாக்க கோரி ஐநாவை நாடியுள்ளார். ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோவிற்கு எழுதிய கடிதத்தில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னத்தில் மாற்றம் செய்வது சர்வதேச விதிகளை மீறுவதாகும், எனவே கல்லறையை பாதுகாக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி யாகூப் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 19, 2025
புதுச்சேரி CM வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுச்சேரி CM ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் ரங்கசாமியின் வீடு முழுவதும் சோதனையிட்டனர். இறுதியில் அது புரளி என தெரியவந்ததையடுத்து போலீஸார் நிம்மதியடைந்தனர். இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
News April 19, 2025
ஹிந்தியில் பெயர் ஏன்? NCERT விளக்கம்

இந்தியாவின் கலாசாரம், அறிவியல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவே ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களுக்கு பெயரிடப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, CBSE பாடப்புத்தகங்களுக்கு மிருதங், சந்தூர், கணித மேளா, கணித பிரகாஷ், பூர்வி, கிருதி, சிதார் என பெயரிடப்பட்டது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில், NCERT தற்போது விளக்கம் அளித்துள்ளது.
News April 19, 2025
போதைப்பொருள் விவகாரம்.. GBU நடிகர் அரெஸ்ட்

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில், எர்ணாகுளத்தில் உள்ள விடுதியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக போலீசார் ரெய்டுக்குச் சென்ற போது, அங்கிருந்து அவர் தப்பி ஓடினார். இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இன்று விசாரணை நடைபெற்ற நிலையில், NDPS சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.