News April 16, 2025

வக்ஃப் சட்டத்தில் புதிய நடைமுறை ஏன்?!

image

இந்து அறநிலையத்துறையை இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க முடியும் என்ற சட்டம் இருக்கும்போது வக்ஃப் வாரியத்துக்கு மட்டும் ஏன் புதிய நடைமுறை என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வக்ஃப் சொத்துகள் எவை என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்வது நியாயமானதா என்றும் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. வக்ஃப் வாரிய சட்டதிருத்தத்திற்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News

News April 19, 2025

இரட்டை இலை மேலே தாமரை மலரும்: நயினார்

image

தமிழக பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நயினார் நாகேந்திரன் சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, அதிமுக கூட்டணி தொடர்பான கருத்துக்களை யாரும் தெரிவிக்க வேண்டாம் எனவும் தலைமையின் அறிவுறுத்தலின்படி நடந்து கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். வரும் தேர்தலில், இரட்டை இலை மேலே தாமரை மலரும் என்று அவர் உறுதிபடக் கூறினார்.

News April 19, 2025

புதுச்சேரி CM வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி CM ரங்கசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் உதவியுடன் ரங்கசாமியின் வீடு முழுவதும் சோதனையிட்டனர். இறுதியில் அது புரளி என தெரியவந்ததையடுத்து போலீஸார் நிம்மதியடைந்தனர். இ-மெயிலில் மிரட்டல் விடுத்த நபர் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

News April 19, 2025

ஹிந்தியில் பெயர் ஏன்? NCERT விளக்கம்

image

இந்தியாவின் கலாசாரம், அறிவியல் பாரம்பரியத்தை வெளிப்படுத்தவே ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் பாடப்புத்தகங்களுக்கு பெயரிடப்பட்டதாக NCERT விளக்கம் அளித்துள்ளது. முன்னதாக, CBSE பாடப்புத்தகங்களுக்கு மிருதங், சந்தூர், கணித மேளா, கணித பிரகாஷ், பூர்வி, கிருதி, சிதார் என பெயரிடப்பட்டது சர்ச்சையானது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்த நிலையில், NCERT தற்போது விளக்கம் அளித்துள்ளது.

error: Content is protected !!