News April 4, 2024

சொந்த ஊர் திரும்பிய தமிழக மீனவர்கள்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 19 தமிழக மீனவர்களை, இலங்கை அரசு விடுவித்தது. இதனைத் தொடர்ந்து, அவர்கள் 19 பேரும் நேற்று கொழும்புவில் இருந்து தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்ட விவகாரம் இந்திய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 19 தமிழக மீனவர்கள் நேற்று சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.

Similar News

News April 20, 2025

ஓட்டுநர், நடத்துநர் பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி!

image

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர் பணியிடங்கள் நிரப்படவுள்ளன. விண்ணப்பிப்பவர்கள் 24 – 40 வயதிற்குள் இருக்க வேண்டும். 10 -ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு நடைபெறும். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். மாதச் சம்பளம் ₹23,000 இருந்து வழங்கப்படும். <>முழு தகவலுக்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும். <<>>

News April 20, 2025

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

image

அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973-ன் கீழ் புத்தகங்களை வெளியிடுவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். தற்போது, இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரசின் செயல்பாடுகள் (அ) கொள்கைகள் தொடர்பான புத்தகங்களை தவிர, இலக்கியம், நாவல், கவிதை, தொழில்முறை உள்ளிட்ட புத்தகங்களை வெளியிட அனுமதி பெற வேண்டியதில்லை. அதேநேரம், தகுதியான அதிகாரிக்கு முறைப்படி தகவல் தெரிவித்து இனி புத்தகங்களை வெளியிட வேண்டும்.

News April 20, 2025

ஈஸ்டர் பண்டிகையின் வரலாறு

image

கிறிஸ்து உயிர்த்தெழுந்த நாள் ஈஸ்டர் என்று குறிப்பிடப்படுகிறது. அதாவது, இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட 3-ம் நாள், அவருடைய சீடர்கள் கல்லறைக்கு சென்ற போது கல்லறை காலியாக இருந்தது. எனவே அந்த நாளில் இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று நம்பப்படுகிறது. கிறிஸ்துமஸைப் போல் அல்லாமல், உயிர்த்தெழுதலின் அடையாளமாக ஈஸ்டர் ஒவ்வொரு ஆண்டும் ஒரே தேதியில் வருவது இல்லை.

error: Content is protected !!