News April 16, 2025

தபால் நிலையங்களில் 1.79 லட்சம் பேர் ஆதார் திருத்தம்

image

கன்னியாகுமரி மாவட்டம் தபால் நிலையங்கள் மூலம் ஆதார் திருத்தம் செய்யப்பட்டு வருகிறது .மேலும் சிறப்பு ஆதார் முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில், குமரி மாவட்ட தபால் நிலையங்கள் மூலமாக ஆதார் பதிவு மற்றும் திருத்தச் சேவைகளை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 336 பேர் பெற்று பயனடைந்துள்ளதாக தபால் துறை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர் பாஸ்போர்ட் சேவையினை 18,484 பேர் பெற்றுள்ளனர் என தெரிவித்தனர்.

Similar News

News January 11, 2026

குமரி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க

News January 11, 2026

குமரி கலங்கரை விளக்கத்தை 67,000 பேர் பார்வையிட்டனர்

image

கன்னியாகுமரி பஸ் நிலையம் செல்லும் வழியில் கலங்கரை விளக்கம் உள்ளது. 1971 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இது இயங்கி வருகிறது. இந்த கலங்கரை விளக்கத்தை கடந்த ஆண்டு (2025) மட்டும் 67 ஆயிரத்து 792 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதில் 59,099 பெரியவர்களும், 8544 சிறியவர்கள் பார்வையிட்டு உள்ளனர். மேலும், வெளிநாட்டினர் 149 பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 11, 2026

திருநங்கை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – கலெக்டர்

image

ஆண்டு தோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து அன்று சுயமாக வாழ்க்கையில் முன்னேறிய குமரி மாவட்ட திருநங்கை ஒருவருக்கு ரூ.1 லட்சம் ரொக்கத்துடன், சிறந்த திருநங்கைக்கான விருது வழங்கப்படுகிறது. எனவே, விருப்பமுள்ள திருநங்கைகள் http://awards.tn.gov.in என்ற
இணையதளத்தில் பிப்.18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!