News April 16, 2025
குமரி மாவட்டத்தில் 34 கோடியில் கால்வாய் சீரமைப்பு பணிகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் கோடை காலத்தை முன்னிட்டு அணைகள் மூடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து கால்வாய் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதற்காக ரூ.34 கோடி அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ம் தேதி அணைகள் பாசனத்திற்காக திறக்கப்படுவதற்கு முன்பு கால்வாய் சீரமைப்பு பணிகளை முடிக்க நீர் வள ஆதார அமைப்பு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News November 6, 2025
குமரி: ஆசை வார்த்தைகள் கூறி ரூ.50 லட்சம் மோசடி

திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அகஸ்டின் ஜான். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர் நாகர்கோவிலில் தங்கி இருந்த போது 3 பேர் தொடர்பு கொண்டு ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ.50 லட்சம் பெற்றனர். பின்னர் தான் ஏமாற்றப்பட்டது தெரியவந்த நிலையில் வடசேரி போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் மோகனன், சுந்தர்ராஜ், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
News November 6, 2025
குமரி: தீயில் கருகிய சிறுவன் உயிரிழப்பு

மேலஉடையப்பன் குடியிருப்பை சேர்ந்த பவிஷ்ணு(13) தீபாவளி அன்று உடல் கருகிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில் உறவினர் சந்திராதேவி(60) வீட்டிற்கு பட்டாசு வெடிக்க சென்ற போது விளக்கில் இருந்த மன்எண்ணெய் கொட்டி தீ விபத்து ஏற்பட்டதாக கூறிய நிலையில் சந்திராதேவி மீது வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார்.
News November 6, 2025
கன்னியாகுமரி: எச்சரிக்கை விடுத்த எஸ்.பி

குமரி எஸ்.பி ஸ்டாலின் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தற்போது பயன்பாட்டியில் உள்ள Grindrசெயலி மூலம் முன் பின் தெரியாத நபர்களிடம் தகவல் பரிமாற்றம் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் சிலர் இளம் வயதினரை ஏமாற்றி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் வந்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி பொதுமக்களை மிரட்டி வழிப்பறி செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.


