News April 16, 2025
மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500: கீதா ஜீவன்

தமிழகத்தில் 7.88 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம் ₹1,500 உதவித் தொகை வழங்கப்படுவதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். இதேபோல், அறிவுசார் குறைபாடு உடையோர், தொழுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு மாதம் ₹2,000 பராமரிப்பு உதவித் தொகை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். இந்தத் தொகை ஒவ்வாெரு மாதமும் 5-ம் தேதி வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
Similar News
News October 27, 2025
பிஹாரையும் தமிழ்நாட்டையும் இணைக்கும் அரசியல் (1/2)

67-ல் காங்., வீழ்ந்த மாநிலங்களில் பிஹாரும் TN-ம் முதன்மையானவை. பிஹாரில் லோஹியா சீடர்கள் (லாலு, நிதிஷ்) களத்தை பிடித்தனர். TN-ல் அண்ணாவின் தம்பிகள் (கருணாநிதி, எம்ஜிஆர்) ஆட்சியை தமதாக்கினர். ஜெ., மறைவுக்கு பிறகு அதிமுக vote bank சரிந்தது போல, பிஹாரில் நிதிஷின் JD(U), பாஜகவிடம் களத்தை இழந்துவருகிறது. பிஹாரில் இருதுருவ அரசியல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், TN-ம் தற்போது அதை நோக்கி நகர்ந்து வருகிறது.
News October 27, 2025
இதைத்தான் பெண்கள் ஆண்களிடம் எதிர்பார்க்குறாங்க

ஆண்களே, உங்கள் பார்ட்னர் கூட எப்போதும் சண்டை வந்துட்டே இருக்குதா? பெண்களின் எதிர்பார்ப்பு என்னவென்று தெரியாமல் இருப்பதே பெரும்பாலும் சண்டைக்கு காரணமாக இருப்பதாக relationship advisors சொல்றாங்க. எனவே, ஆண்களிடம் இருந்து பெண்கள் என்ன எதிர்பார்க்குறாங்க என்பதை தெரிந்துகொள்ள SWIPE பண்ணுங்க. இதை சக ஆண்களுக்கு SHARE பண்ணுங்க. நீங்க இதெல்லாம் செய்றீங்களான்னு கமெண்ட் பண்ணுங்க.
News October 27, 2025
இன்று இங்கெல்லாம் டாஸ்மாக் கடைகள் இயங்காது

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி, குருபூஜை விழாவை முன்னிட்டு ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களுக்கு இன்று முதல் 3 நாள்கள் விடுமுறையாகும். அந்த மாவட்டங்களில் உள்ள மதுப்பிரியர்கள் மதுரை, விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்துள்ளனர். இதனிடையே, பசும்பொன்னில் இன்று DGP வெங்கட்ராமன் ஆய்வு செய்தார்.


