News April 4, 2024
ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது

அதிமுக இல்லையென்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்குகிறது. ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது, அதற்கு நான் பொறுப்பு. உரிமைத் தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
Similar News
News November 2, 2025
காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் போய்விட்டது: PM

ஆபரேஷன் சிந்தூர் கொடுத்த அதிர்ச்சியில் இருந்து காங்., பாக்., இன்னும் மீளவில்லை என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் பிரசாரத்தில் பேசிய அவர், ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை நாடே கொண்டாடிய நிலையில், காங்., RJD அதை விரும்பவில்லை. இதனால் காங்கிரஸ் அரச குடும்பத்தின் தூக்கம் பறிபோய்விட்டதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், CM பதவிக்காக எதிர்க்கட்சிகள் தங்களுக்குள் அடித்துக் கொள்வதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 2, 2025
பிரசவ நாள் நெருங்கும்போது செய்ய வேண்டியவை

➤குழந்தையின் நிலை, இதயத்துடிப்பு, தாயின் ஆரோக்கியம் ஆகியவை சீராக உள்ளனவா என்பதை தொடர்ந்து செக் பண்ணுங்க ➤சத்தான உணவு, பழம், பால் போன்றவற்றைச் சீராக எடுத்துக் கொள்ளவும் ➤மெதுவான நடைபயிற்சி/மருத்துவர் பரிந்துரைத்த யோகா செய்யலாம் ➤ஆடைகள், டயப்பர், மருத்துவ ஆவணங்கள், சார்ஜர், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள் ➤ கர்ப்பிணியை தனியாக விட வேண்டாம். SHARE THIS.
News November 2, 2025
மழை வெளுக்கப் போகுது… வெளியே வராதீங்க

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதன்படி, இன்று இரவு 10 மணி வரை திருவள்ளூர், வேலூர், தி.மலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆகையால், இரவில் வீட்டை விட்டு வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே!


