News April 4, 2024
ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது

அதிமுக இல்லையென்றால் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வந்திருக்காது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். கரூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், “அதிமுக கொடுத்த தொடர் அழுத்தத்தால் தான் மகளிர் உரிமைத் தொகையை திமுக அரசு வழங்குகிறது. ரூ.1,000 உரிமைத் தொகையை யாராலும் நிறுத்த முடியாது, அதற்கு நான் பொறுப்பு. உரிமைத் தொகையை நிறுத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்தார்.
Similar News
News April 20, 2025
இந்தியா செல்ல மாட்டோம்: பாக். கிரிக்கெட் வாரியம்

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவுக்குச் செல்லாது என பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வராமல் துபாய் மைதானத்தில் விளையாடியது போலவே, தாங்களும் செய்வோம் என அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இந்தாண்டு இந்தியா நடத்தும் மகளிர் உலகக் கோப்பை செப். 29 தொடங்கி அக். 26 வரை நடைபெற உள்ளது.
News April 20, 2025
‘உயிர் உங்களுடையது தேவி’.. த்ரிஷா க்யூட் போட்டோஷூட்

சினிமாவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கதாநாயகியாக வலம் வரும் த்ரிஷா, தற்போதும் முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக கலக்கி வருகிறார். இளசுகளை கவரும் வகையில் இன்ஸ்டகிராமில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. சேலை அணிந்து த்ரிஷா பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு ‘Cuteness overload’, ‘Gorgeous’ என ரசிகர்கள் கமெண்ட்டில் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.
News April 20, 2025
திருமாவளவனுக்கு அழைப்பு விடுத்த பாமக..!

பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாட்டில் பங்கேற்க திருமாவளவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. மாநாட்டுக்கான அழைப்பிதழை பாமக மாவட்டச் செயலாளர் சரவணன் கொடுக்க, அதனை சிரித்த முகத்துடன் திருமாவளவன் பெற்றுக் கொண்டுள்ளார். மாநாடு சிறப்பாக நடக்க வாழ்த்துகள் என்றும் அவர் கூறியுள்ளார். 2011-ல் திமுக கூட்டணியில் பாமக – விசிக இணைந்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.