News April 16, 2025

ராணுவத்தில் சேர விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

சிவகங்கை மாவட்ட இளைஞர்கள் 2025-ம் ஆண்டுக்கான இந்திய ராணுவ அக்னிவீர் ஆட்சேர்ப்புக்கு ஏப்.10 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான காலஅவகாசம் ஏப்.25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவர்கள் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். *ராணுவத்தில் சேர ஆர்வமுள்ள உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்*

Similar News

News April 18, 2025

பரியாமருதுபட்டி நந்தீஸ்வரர் வரலாறு தெரியுமா?

image

சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை என்னும் சிற்றூரின் அருகிலுள்ளது பரியாமருதுபட்டி நந்தீஸ்வர கோயில். இந்த ஆலயம், 1829-ம் வருடம் நகரத்தாரால் கட்டப்பட்டது. மகாபாரதப் போரில் காயமடைந்த பாண்டவர்கள், இந்தத் தலத்தின் மண்ணை அள்ளி காயங்களின் மேல் பூச, உடனே ஆறியதாக குறிப்புகள் உண்டு. இங்குள்ள நெய் நந்தீஸ்வரரிடம் வேண்டிக்கொண்டு, நெய் வாங்கி அபிஷேகம் செய்தால் எண்ணியது நிறைவேறும் என்பது நம்பிக்கை. Share It.

News April 18, 2025

கோடைகால பயிற்சி முகாமில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டத்தில் உறைவிடம் சாரா கோடைக்கால பயிற்சி முகாம் 21 நாட்கள் நடத்தப்படவுள்ளது. அதில் தடகளம், கூடைப்பந்து, ஹாக்கி, கபடி, கால்பந்து ஆகிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. மேலும் விபரங்களுக்கு 7401703503 மற்றும் அலுவலக எண் 04575 299293 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 18, 2025

சிவகங்கை: ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் மின் தொழில் நுட்ப வல்லுனர் (Electrical Technician) காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000 வரை வழங்கப்படுகிறது. 12-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

error: Content is protected !!