News April 16, 2025
தனிக் கட்சி தொடங்கும் ஆம்ஸ்ட்ராங் மனைவி?

பிஎஸ்பி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி புதிய கட்சியை தொடங்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு பிஎஸ்பி மாநிலத் தலைவராக ஆனந்தன் நியமிக்கப்பட்டார். அவருடன் நிலவிய கருத்து வேறுபாடால் கட்சியிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் ஆம்ஸ்ட்ராங் மக்கள் கட்சி என்ற பெயரில் புது கட்சி தொடங்கக்கூடும் எனச் சொல்லப்படுகிறது.
Similar News
News August 19, 2025
‘திரை தீப்பிடிக்கும்..’ ஒரே படத்தில் ரஜினி, கமல்?!

தொடக்கத்தில் ஒன்றாக நடித்த ரஜினியும் கமலும், பிறகு வெவ்வேறு பாதையில் சென்று விட்டனர். இந்நிலையில், இருவரையும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ‘கூலி’ படத்தின் ரிலீசுக்கு முன், இருவரையும் சந்தித்து அவர் ஒரு கதை சொன்னதாகவும், இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. லோகி இயக்கத்தில் ரஜினியும்- கமலும்.. எப்படி இருக்கும்?
News August 19, 2025
பாஜகவின் ஸ்கெட்ச்.. பதிலுக்கு திமுக போட்ட மாஸ்டர் பிளான்

NDA-வின் து.ஜனாதிபதி வேட்பாளராக CPR-ஐ களமிறக்கியதற்கு பின்னால் கொங்கு வாக்காளர்களை கவரும் பாஜகவின் பிளான் இருப்பதாக கூறப்பட்டது. அதோடு, CPRஐ திமுக ஆதரிக்க தவறினால் அது அவர்களுக்கு பேக் ஃபயர் ஆகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அதே கொங்கு பெல்ட்டை சேர்ந்தவரான இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாம். திமுகவின் இந்த மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகுமா?
News August 19, 2025
பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டிரம்ப் 50% வரி விதித்ததால், தமிழக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு CM ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்து, மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.