News April 16, 2025

காஞ்சிபுரத்தில் தண்ணீர் தட்டுப்பாடு: நடவடிக்கை தேவை

image

காஞ்சிபுரத்தில், ஜல்ஜீவன் திட்டம் மூலம் பரவலாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது, பல இடங்களில் தற்போது வரை குடிநீர் பிரச்னை நிலவுகிறது. கிராமங்களிலும், நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில், குழாய்களில் சிறிய அளவிலான மோட்டார் பொருத்தி, குடிநீரை முறைகேடாக பல ஆயிரம் லிட்டர் உறிஞ்சுகின்றனர். எனவே இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது.

Similar News

News November 5, 2025

காஞ்சிபுரம் மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

image

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News November 5, 2025

காஞ்சியில் முக்கிய தொடர்பு எண்கள்!

image

உங்களை வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் புகாரளிக்கலாம். வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147, தொழிலாளர் துணை ஆணையர் ஸ்ரீபெரும்புதூர் – 044-27156157, தொழிலாளர் உதவி ஆணையர் காஞ்சிபுரம் – 044-27221090. ஷேர் செய்யுங்கள்

News November 5, 2025

காஞ்சி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!