News April 16, 2025
கோட்டகுப்பத்தில் இலங்கை அகதி விபத்தில் மரணம்

மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த முத்துக்குமார். கோட்டக்குப்பத்தை அடுத்த அனிச்சம்குப்பம் பகுதியில் சாலையில் நடந்து சென்றார். அப்போது, அங்கு புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையைக் கடக்க சென்னையிலிருந்து புதுச்சேரி நோக்கிச் சென்ற தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்து முத்துக்குமார் மீது மோதியதில் உயிரிழந்தார். கோட்டகுப்பம் போலீஸ் வழக்கு பதிவு.
Similar News
News April 21, 2025
கொளுத்தும் வெயில் தப்பிக்க எளிய டிப்ஸ்

விழுப்புரத்தில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS,எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர் – நடத்துநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த <
News April 21, 2025
விழுப்புரத்தில் எஸ்.ஐ. தேர்வுக்கு இலவச பயிற்சி

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், இன்றுமுதல்(ஏப்.21) சப்-இன்ஸ்பெக்டர்கள் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறது. இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள், விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரில் அணுகி பதிவு செய்ய வேண்டும் ஷேர் பண்ணுங்க…