News April 16, 2025
பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த ஜோதிடர்கள் கைது

சிங்காரப்பேட்டை அடுத்த தளபதி நகர் சேர்ந்த சரிதா. இவரிடம் உங்களுக்கு நேரம் சரியில்லை என்று கூறி காரில் வந்த 2 ஜோதிடர்கள் அவர் காதில் அணிந்திருந்த நகை மற்றும் 5000 பணத்தை வைத்து பரிகாரம் செய்வதாக கூறி நகை பணத்துடன் தப்பி ஓடினர். இதுகுறித்து சிங்காரப்பேட்டை போலீசார் நடத்திய விசாரணையில் தர்மபுரி மாவட்டம் செங்க்குட்டை பகுதியை சார்ந்த சரண், ஜீவா ஆகிய இருவரையும் கைது செய்தனர். பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
Similar News
News January 12, 2026
கிருஷ்ணகிரியில் 4 பேர் அதிரடி கைது!

காமன்தொட்டியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் பிரவீன்குமார் (38). கடந்த 7-ம் தேதி காமன்தொட்டி நெடுஞ்சாலையில் 5 பேர் தங்களை போலீசார் என கூறி, பிராவின் குமாரை காரில் கடத்தியுள்ளனர். மேலும் ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டினர். சுதாரித்து கொண்ட பிரவீன் பணம் காரில் உள்ளது எடுத்து வருகிறேன் என கூறி தப்பினார். இதையடுத்து போலீசார் மல்லேஷ், நெல்சன் (42), வரதராஜன் (30), ராஜசேகர் (50) ஆகியோரை கைது செய்தனர்.
News January 12, 2026
கிருஷ்ணகிரி: வாலிபருக்கு குண்டார்!

நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுமன் (22). இவர் கடந்த மாதம் மூதாட்டி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இதையடுத்து சிப்காட் போலீசார் சுமனை கைது செய்து சேலம் சிறையில் அடைத்தனர். மேலும் விசாரணையில் சுமன் மீது மேலும் சில வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையின் பேரில் தற்போது சுமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
News January 12, 2026
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க


