News April 16, 2025
காரைக்காலில் கிரேன் மோதி ஒருவர் பலி

காரைக்காலைச் சேர்ந்த செல்வராஜ் (63) நேற்று நித்திஸ்வரன் கோயில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கிரேன் அவர் மீது மோதியது. இதில் முன் சக்கரத்தில் சிக்கி செல்வராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிலந்து வந்த போலீசார் செல்வராஜ் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மதுரையைச் சேர்ந்த கிரேன் டிரைவர் ஜேம்ஸ்ராஜ் கைது செய்யப்பட்டார்.
Similar News
News November 5, 2025
புதுச்சேரி: டிப்ளமோ போதும்.. ரூ.29,735 சம்பளம்!

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில், காலியாக உள்ள 600 Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு Diploma, B.Sc. in Chemistry போதுமானது, சம்பளம் மாதம் ரூ.29,735 வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 12.11.2025ம் தேதிக்குள் <
News November 5, 2025
புதுவை: அதிகாரிகள் விடுவிப்பு

புதுச்சேரி பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் செய்தி குறிப்பில், “சப் – கலெக்டராக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இஷிதா ரதி கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பொறுப்பிலிருந்தும், ஏனாமில் பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ் அதிகாரி அங்கித்குமார் கூடுதலாக கவனித்து வரும் ஏனாம் நகராட்சி ஆணையர் பொறுப்பில் இருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.” என கூறியுள்ளார்.
News November 5, 2025
புதுச்சேரி: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்தவகையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை (நவ.6) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஷேர் பண்ணுங்க!


