News April 16, 2025
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆயுள்

கடந்த 2018 மார்ச் 5ம் தேதி தாம்பரத்தை சேர்ந்த 6 வயது சிறுமி விளையாடி கொண்டிருக்கும் போது, அதே பகுதியைச் சேர்ந்த முருகன் (40) என்பவர் சிறுமியை சாக்லேட் வாங்கி தருவதாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். இந்த வழக்கில் முருகனுக்கு ஆயுள் தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி நசீமா பானு நேற்று தீர்ப்பளித்தார். மேலும், சிறுமிக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
Similar News
News April 19, 2025
சென்னை இரவு ரோந்துப் பணி போலீசாரின் விவரம்

சென்னை போலீசாரின் “Knights on Night Rounds” (18.04.2025) இன்று இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை செயல்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் அதிகாரிகள் வாகனத்தில் ரோந்துப் பணியில் ஈபடுவர். அவசர காலங்களில் தொடர்பு கொள்ள நேரடி மொபைல் எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நிகழ்ந்தால் மேலே உள்ள எண்களை அழைக்கலாம். *இரவில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு கட்டாயம் உதவும், பகிரவும்*
News April 18, 2025
சென்னை மக்களே! செல்வம் செழிக்க போக வேண்டிய கோவில்

செல்வத்திற்கு அதிபதி லட்சுமி. அதைக் காப்பவர் குபேரன். இவ்விருவரும் அருள்பாலிக்கும் லட்சுமி குபேரர் கோவில், சென்னை அருகே ரத்தினமங்கலத்தில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே லட்சுமி குபேரருக்கு இருக்கும் ஒரே கோவில் இதுதான். இக்கோவிலில், பௌர்ணமி, அமாவாசையில் லட்சுமி குபேர பூஜை செய்தால் போதும், உங்கள் வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பது ஐதீகம. *நண்பர்களுக்கும் லட்சுமி குபேரரை தெரியப்படுத்துங்கள்*
News April 18, 2025
மாமல்லபுரத்தில் இலவசமாக சுற்றி பார்க்கலாம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து புராதன சின்னங்களை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச பாரம்பரிய தினம் மற்றும் புனித வெள்ளி இன்று (ஏப்ரல் 18) கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றுலா பயணிகள் கட்டணமின்றி இலவசமாக சுற்றிப்பார்க்கலாம் என்று தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. ஷேர் செய்யுங்கள்