News April 16, 2025
குற்றாலம் தங்கும் விடுதியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி இருந்த வல்லம் பகுதியை சேர்ந்த அசோக் குமார் என்பவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி குற்றாலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை என தெரியவந்துள்ள நிலையில் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News September 28, 2025
தென்காசி: கிராம வங்கியில் வேலை! இன்றே கடைசி

தென்காசி மக்களே, தமிழ்நாடு கிராம வங்கிகளில் ஆபிசர் பணிகளுக்கு 489 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன. 18 – 40 வயதுக்கு உட்பட்ட டிகிரி முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். செப். 28க்குள் (இன்று) இங்கு <
News September 28, 2025
தென்காசியில் ரூ.69.49 கோடி ஒதுக்கீடு

தென்காசி நகராட்சிக்குள்பட்ட பகுதியில் குடிநீர் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ள ரூ.69.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் தலைமை வகித்த அவசர கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்ணீர் விடும் சமயங்களில் பெரும்பாலான வீடுகளில் மோட்டார் மூலம் நீர் பிடிப்பதால் தட்டுப்பாடு நிலவுவதாக சாதிர் கூறினார்.
News September 28, 2025
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (27-09-25) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விபரம். அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் -9884042100 ஐ தொடர்பு கொள்ளலாம்.