News April 16, 2025
காலை 7 மணி வரை மழை

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 5 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, ராமநாதபுரம், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 5 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது. இருப்பினும், காலை 10 மணிக்கு மேல் வெயிலும் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 12, 2025
நவம்பர் 12: வரலாற்றில் இன்று

*உலக நுரையீரல் அழற்சி நாள். *1927 – மகாத்மா காந்தி இலங்கைக்கான தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை மேற்கொண்டார். *1927 – ஜோசப் ஸ்டாலின் சோவியத் யூனியனின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றினார். *1927 – வங்கதேசத்தில் போலா புயல் தாக்கியதில் 5 லட்சம் பேர் உயிரிழந்தனர். *1927 – நடிகை சனம் ஷெட்டி பிறந்தநாள்.
News November 12, 2025
உலகக்கோப்பைக்கு பிறகு என் உலகமே மாறியது: தீப்தி

மகளிர் ODI WC-க்கு பிறகு தனது வாழ்க்கையே மாறிவிட்டதாக இந்திய வீராங்கனை தீப்தி சர்மா தெரிவித்துள்ளார். முன்பு பொது இடங்களில் சென்றால், யாருக்கும் தன்னை தெரியாது. ஆனால், இப்போது மாஸ்க் அணிந்து சென்றாலும், கண்டுபிடித்து தன்னை பாராட்டுகின்றனர். கனவில் இருப்பது போல் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ODI WC-ல் 215 ரன்கள் + 22 விக்கெட்களை எடுத்து, தீப்தி தொடர் நாயகி விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
News November 12, 2025
PAK குற்றச்சாட்டு பழைய யுத்தி: இந்தியா

<<18263443>>பாகிஸ்தானில் நடந்த கார் வெடி விபத்துக்கு<<>> இந்தியா தான் காரணம் என அந்நாட்டு PM குற்றஞ்சாட்டியிருந்தார். இது அடிப்படை ஆதாரமற்றது என மறுத்துள்ள இந்தியா, சொந்த நாட்டு பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப பாக்., மேற்கொள்ளும் பழைய யுத்தி இது என்றும் சாடியுள்ளது. மேலும், இது குறித்த போதிய தெளிவு இருப்பதால், உலக நாடுகள் பாகிஸ்தானின் பொய்யை நம்பமாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளது.


