News April 16, 2025

திலகபாமா, வடிவேல் ராவணன் சமரசம்

image

அன்புமணியை பாஜக தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கியது ஜனநாயக படுகொலை என்று திலகபாமா கடுமையாக விமர்சித்தார். இதனால், ஆத்திரமடைந்த வடிவேல் ராவணன், பாமகவில் இருந்து திலகபாமா வெளியேற வேண்டும் என்று காட்டமாக அறிக்கை வெளியிட்டார். இது பாமகவில் உள்கட்சி மோதலுக்கு மேலும் வழிவகுத்தது. இந்நிலையில் இருவரையும், தனது இல்லத்திற்கு அழைத்து அன்புமணி சமரசம் செய்து வைத்து, மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Similar News

News September 16, 2025

இந்தியா முழுவதும் SIR? அக்.7-ல் தீர்ப்பு

image

பிஹாரில் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர சீர்த்திருத்த (SIR), நடைமுறைகளில் முறைகேடு கண்டறியப்பட்டால், அதை முழுமையாக ரத்து செய்ய நேரிடும் என சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது. மேலும், இது தொடர்பாக வரும் அக்.7-ல் இறுதி விசாரணை நடைபெறும் எனவும், அது இந்தியா முழுமைக்கும் SIR மேற்கொள்ளப்படுமா என்பதற்கான உத்தரவாக அமையும் என்றும் தெரிவித்துள்ளது.

News September 16, 2025

ITR தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு

image

ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிந்த நிலையில், அதை இன்று ஒருநாள் மட்டும் நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது. நேற்று கடைசி நாள் என்பதால், ஒரேநாளில் அதிகமானோர் தாக்கல் செய்ய முனைப்பு காட்டினர். இதனால், வருமான வரித்துறையின் இணையதளம் முடங்கியது. அதன் காரணமாக, இன்று ஒருநாள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுவரை 7.3 கோடி பேர் ITR தாக்கல் செய்துள்ளனர்.

News September 16, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: சிற்றினஞ்சேராமை. ▶குறள் எண்: 460 ▶குறள்: நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின் அல்லற் படுப்பதூஉம் இல். ▶பொருள்: ஒருவனுக்கு நல்ல இனத்தைக் காட்டிலும் பெரிய துணையும் இல்லை; தீய இனத்தைக் காட்டிலும் துன்பம் தருவதும் இல்லை.

error: Content is protected !!