News April 15, 2025

என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

image

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

Similar News

News April 19, 2025

IPL 2025: DC முதலில் பேட்டிங்

image

IPL 2025-ல் அகமதாபாத்தில் நடைபெறும் மேட்ச்சில், GT அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இதுவரை இரு அணிகளும் 5 முறை மோதியுள்ளன. அவற்றில் 3-ல் DC-யும், 2-ல் GT-யும் வெற்றி பெற்றுள்ளன. இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவாங்க என நினைக்குறீங்க?

News April 19, 2025

₹49,000 வரை சம்பளம்.. மத்திய அரசில் 200 காலியிடங்கள்!

image

மத்திய அரசின் இந்தியா நிலக்கரி நிறுவனத்தில் இருக்கும் 200 டெக்னீசியன் காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதற்கு, 18 முதல் 30 வயதுக்குட்பட்ட 10வது, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும். மாதம் ₹49,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு மே 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

News April 19, 2025

மதிமுகவினருக்கு துரை வைகோ எம்.பி. வேண்டுகோள்

image

மதிமுக முதன்மை செயலாளர் பதவியிலிருந்து விலகிய <<16147444>>துரை வைகோ<<>> எம்பி, 3 பக்க அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 20ம் தேதி நடைபெறும் நிர்வாகக் குழு கூட்டத்தில் மட்டுமே பங்கேற்பேன், பிறகு முக்கிய கூட்டங்களில் பங்கேற்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். 7 ஆண்டாக தான் மேற்கொண்ட முயற்சிகளை நிர்வாகிகள் தொடர வேண்டும், எந்த சூழலிலும் வைகோ மனம் கலங்கி விடாமல் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.

error: Content is protected !!