News April 15, 2025

என்னை நீக்க அவருக்கு அதிகாரம் இல்லை: பொற்கொடி

image

தன்னை கட்சியில் இருந்து நீக்க BSP மாநிலத் தலைவர் ஆனந்தனுக்கு அதிகாரம் இல்லை என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார். தனது கணவர் கொலை வழக்கில் CBI விசாரணை வேண்டும் என்பதில் ஏன் ஆனந்தன் அக்கறை காட்டவில்லை எனவும், தனக்கு எதிராக அவதூறு செய்தியை பரப்புவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனந்தனுக்கு எதிராக மேலிட பிரதிநிதிகளிடம் பொற்கொடி புகார் அளித்த நிலையில், அவரது கட்சிப் பதவி பறிக்கப்பட்டது.

Similar News

News December 20, 2025

பூமியின் முதல் உயிரினம் எது தெரியுமா?

image

பூமியில் மனிதர்கள், டைனோசர்களுக்கு பல கோடி ஆண்டுகள் முன்பே தோன்றிய முதல் உயிரினம் பற்றிய கேள்விக்கு விடை தேடி வந்த விஞ்ஞானிகள், ஓமன் மற்றும் இந்திய பாறைகளில் ஒரு வியக்க வைக்கும் உண்மையை கண்டறிந்தனர். கடல்களில் உள்ள கடற்பஞ்சுகளின் மூதாதையர்கள் தான் பூமியின் முதல் விலங்குகள் என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். சுமார் 54.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவை கடலில் வாழ்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

News December 20, 2025

PM மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்!

image

மேற்கு வங்க மாநிலம் தாஹேர்பூருக்கு புறப்பட்ட PM மோடியின் ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தா திரும்பியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் திருப்பி விடப்பட்டுள்ளது. முன்னதாக தாஹேர்பூரில் நடைபெறவுள்ள பாஜகவின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற <<18621174>>பாஜக தொண்டர்கள் 4 பேர்<<>> ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

News December 20, 2025

PM மோடியை காண சென்ற BJP தொண்டர்கள் பலி

image

கொல்கத்தா அருகே ரயில் மோதிய விபத்தில், 4 BJP தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தஹெர்பூரில் நடக்கும் PM மோடியின் பேரணியில் பங்கேற்க 40 BJP தொண்டர்கள் பஸ்ஸில் சென்றனர். சிறிது ஓய்வெடுக்க, கிருஷ்ணாநகர்-ரணகாட் ரயில்வே கிராஸிங் பகுதியில் அவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர். பனிப்பொழிவால் ரயில் வந்தது கூட அவர்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.

error: Content is protected !!