News April 15, 2025
நாமக்கல் காவல் துறை சார்பில் வாகன ஏலம்!

நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 23 வாகனங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் முன்பணமாக ரூ. 5 ஆயிரத்தை, 17ம் தேதி தேதி காலை 9 மணி முதல் 10 மணிக்குள், நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் செலுத்த வேண்டும். நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்களை அனுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 1, 2026
நாமக்கல்லில் போலீஸ் குவிப்பு

கபிலர்மலையில் புகழ்பெற்ற பாலசுப்பிரமணிசாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று (பிப்.1) விமரிசையாக நடைபெறுகிறது. இதனையொட்டி நாமக்கல், ஈரோடு, கரூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்த வருவார்கள். இதனால், பக்தர்களின் பாதுகாப்பிற்காக 200-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
News February 1, 2026
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News February 1, 2026
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களைத் தடுக்கவும் இன்று (ஜனவரி 31, 2026) இரவு ரோந்துப் பணிக்கான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் முக்கிய உட்கோட்டங்களான நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, பள்ளிபாளையம் மற்றும் வேலூர் பகுதிகளில் விழிப்புடன் செயல்பட அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


