News April 15, 2025
செல்வம் அருளும் கோடி கொடுத்த நாதர்!

ஒரு கோடி சித்தர்கள் வழிபட்ட அதிசய சிவாலயம் ஒன்று விழுப்புரம் மாவட்டம் ஒரு கோடி என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.ஒரு கோடி சித்தர்கள் சிவபெருமானை வழிபட்ட பகுதி என்பதால், இந்த ஊருக்கு ‘ஒருகோடி’ என பெயர் வந்தது என்கிறார்கள். கோடி கொடுத்த நாதரை வழிபட்டால், கோடி கோடியாய் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. தொழில், வியாபாரத்தில் சிரமப்படும் உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Similar News
News April 30, 2025
விழுப்புரம் அருகே ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் வி.மருதுார் காளியம்மன் கோவில் அருகில், ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக குடிமைபொருள் பிரிவிற்கு தகவல் கிடைத்தது. தனி தாசில்தார் ஆனந்தன் மற்றும் ஆர்.ஐ.,க்கள் கண்ணன், லட்சுமிநாராயணன்,சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். 25 மூட்டைகளில்,1,250 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது.அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக குடோனிற்கு அனுப்பி வைத்தனர்.
News April 30, 2025
அக்ஷய திருதியை: தங்கம் வாங்க போறீங்களா?

அன்னை மகாலட்சுமி செல்வம், வளங்கள் மற்றும் மகிழ்ச்சியின் அடையாளம் ஆவார். அந்தவகையில் அக்ஷய திருதியான இன்று(ஏப்.30) விழுப்புரத்தில் உள்ள மகாலட்சுமி அல்லது பெருமாள் கோயிலுக்கு சென்று அன்னையின் அருளை பெற்று விட்டு தங்கம் வாங்க செல்லுங்கள். காலை 9:30 – 10:30 மற்றும் மாலை 4:30 – 5:30 மணி வரை நல்ல நேரம் என்பதால் அந்த நேரத்தில் தங்கம் வாங்குங்கள். செல்வ வளமும், எல்லா வளமும் கிடைக்கும். ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.