News April 15, 2025

நெல்லை மாவட்ட பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

image

நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளிலும் இனி மாணவர்களின் பைகளை சோதனை செய்ய நெல்லை மாவட்ட முதன்மை கல்வி துறை இன்று (ஏப்.15) உத்தரவிட்டுள்ளது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் மாணவர் மற்றும் ஆசிரியருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில் ஏற்கனவே அரசு பள்ளிகளில் சோதனை செய்யப்பட்டு வரும் நிலையில் இனி தனியார் பள்ளிகளிலும் சோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. *ஷேர் பண்ணுங்க

Similar News

News February 17, 2026

திருநெல்வேலி: பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

image

பாளையை சேர்ந்தவர் ஜோஸ்பின் சாலமன்(29). பாளை தனியார் பள்ளியில் கணக்கு ஆசிரியராக பிளஸ் 1, பிளஸ்2 வகுப்பு எடுத்து வருகிறார். இவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும் அருவருக்கத்தக்க வகையிலும் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவிகள் பள்ளி முதல்வரிடம் புகார் செய்தனர். இதன் அடிப்படையில் முதல்வர் பாளை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் போலீசார் ஜோஸ்பின் சாலமனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

News February 17, 2026

திருநெல்வேலி மாவட்ட தாசில்தார்கள்

image

நெல்லை மக்களே, உங்கள் பகுதி குறைகளை தெரிவிக்க தாசில்தார் எண்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

▶️திசையன்விளை- 9384094224

▶️சேரன்மகாதேவி- 9384094223

▶️மானூா்- 9384094222

▶️இராதாபுரம்- 9445000674

▶️நாங்குநேரி- 9445000673

▶️அம்பாசமுத்திரம்- 9445000672

▶️பாளையங்கோட்டை- 9445000669

▶️திருநெல்வேலி- 9445000671

(அலுவக நேரத்தில் மட்டும் அழைக்கவும்)

*ஷேர் பண்ணுங்க

News February 17, 2026

நெல்லை மாணவி – தமிழ்நாட்டின் சிறந்த பெண் குழந்தை விருது

image

மாநிலத்தின் 2025ம் ஆண்டிற்கான சிறந்த பெண் குழந்தை விருதினை நெல்லையை சேர்ந்த இளம் எழுத்தாளர் மாணவி சூடாமணிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சிறந்த மாநில பெண் குழந்தை விருதினை தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மாணவி சூடாமணிக்கு இன்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து விருது பெற்ற மாணவிக்கு பாராட்டு குவிந்த வண்ணம் உள்ளது. *ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!