News April 15, 2025
தமிழ்நாடு இளைஞர்களுக்கு சிங்கப்பூர் அரசு விருது

கடந்த வாரம் சிங்கப்பூர் பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பல குழந்தைகள் தீயில் சிக்கி கொண்டனர். அப்போது அருகில் பணியில் இருந்த லால்குடி, கல்லகம் ஊராட்சியை சேர்ந்த சரண்ராஜ் உள்பட 4 தமிழக இளைஞர்கள் தீயணைப்பு வாகனம் வரும் முன் துரிதமாக செயல்பட்டு 16 குழந்தைகள் உட்பட 22 பேரை காப்பாற்றியுள்ளனர். இவர்களின் வீர தீர செயலை பாராட்டி சிங்கப்பூர் அரசாங்கம் ‘Friends of ACE’ எனும் விருதினை வழங்கி பாராட்டியது.
Similar News
News December 24, 2025
திருச்சி: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

திருச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 24, 2025
திருச்சி அருகே விபத்தில் உடல் சிதறி பலி!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கல்லாமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், ஆண் ஒருவர் சம்பவ இடத்திலேய உடல் சிதறி பலியானார். இதுகுறித்து தகவலறிந்த வளநாடு போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரிக்கும் போலீசார், அவர் மீது மோதிய வாகனத்தை தீவிரமாக தேடி வருகின்றனர்.
News December 24, 2025
அரசு வேலை: திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட சுகாதார சங்கம் சார்பில், இருங்களூர், எதுமலை ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், காலியாக உள்ள சித்த மருத்துவ மருந்து வழங்குநர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர், திருச்சி அரசு மருத்துவமனையில் அமைந்துள்ள சித்த மருத்துவ பிரிவில் விண்ணப்பங்களை பெற்று, வரும் 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


