News April 15, 2025
பைக் விபத்து: சிறுவன் கூர்நோக்கு இல்லத்தில் அடைப்பு

சென்னை சாலிகிராமத்தில் கடந்த 11ஆம் தேதி அதிவேகமாக பைக் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 16 வயது சிறுவன், சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவனின் தாயார் ஜாமினில் விடுவிப்பு. விபத்தில் படுகாயம் அடைந்த 76 வயது முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
சென்னையில் இன்று 116 சிறப்பு மருத்துவ முகாம்கள்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு இன்று (அக் 29) மண்டல வாரியாக திருவொற்றியூர்-3, மணலி-3, மாதாவரம்-3, தண்டையார்பேட்டை-4, இராயபுரம் – 3, திரு.வி.க. நகர் – 9, அம்பத்தூர் – 10, அண்ணாநகர் – 21, தேனாம்பேட்டை – 3, கோடம்பாக்கம் – 9, வளசரவாக்கம் – 3, ஆலந்தூர் – 12, அடையார் – 13, பெருங்குடி – 11, சோழிங்கநல்லூர் – 9 முகாம்கள் என 116 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறுகிறது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
News October 29, 2025
சென்னை: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்ற ஆ.ராசா

நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, ஆஸ்திரேலியா நாட்டின் பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம் (PATCA) அமைப்பின் சார்பில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள மாநாட்டில் மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமை தலைப்பில் உரையாற்றவுள்ளார். இதனையடுத்து இன்று திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முதல்வருமான முக.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.


