News April 15, 2025
தரமான சம்பவம்.. ஸ்ரேயஸை தேடி வந்த ஐசிசி விருது..!

மார்ச் மாதத்திற்கான ஐ.சி.சி. சிறந்த வீரர் விருதை இந்தியாவின் ஷ்ரேயஸ் ஐயர் வென்றுள்ளார். ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஐசிசி சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. சாம்பியன்ஸ் டிராபியில் (243 ரன்கள் ) சிறப்பாக விளையாடிய ஸ்ரேயஸ் ஐயர் இந்த மாதத்திற்கான விருதை வென்று அசத்தியுள்ளார். பிப். மாதத்திற்கான விருதும் இந்தியரான சுப்மன் கில்லுக்கு கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 23, 2025
World சந்தையில் தங்கம் விலை கடும் சரிவு

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மளமளவென குறைந்து வருகிறது. 2013-ம் ஆண்டுக்கு பிறகு குறைந்த நாள்களில் சுமார் 450 டாலர்கள் சரிவை சந்தித்துள்ளது. இதனால், இந்திய சந்தையிலும் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது 1 அவுன்ஸ் தங்கம் மேலும் 91(₹7,991) டாலர்கள் வரை(2.22%) குறைந்து 4,032 -க்கு விற்பனையாகிறது. இதனால், இன்றும் நம்மூரில் தங்கம் விலை சரிய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News October 23, 2025
கரூர் வழக்கில் 2 IPS அதிகாரிகள் நியமனம்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கின் CBI விசாரணையை மேற்பார்வை செய்யும் குழுவுக்கு 2 IPS அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்பு படையில் ஐஜியாக பணிபுரியும் சுமித் சரண், டெல்லியில் ரிசர்வ் போலீஸ் படை ஐஜியாக பணிபுரியும் தமிழக பிரிவு IPS அதிகாரி சோனல் மிஸ்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். சுமித் சரண் கோவை மாநகர போலீஸ் கமிஷனராகவும், சோனல் மிஸ்ரா திருச்சி, ஈரோடு, கிருஷ்ணகிரியில் பணியாற்றியுள்ளனர்.
News October 23, 2025
மழை காலத்தில் இந்த கசாயம் குடிங்க!

✱தேவை: வெற்றிலை, கற்பூரவல்லி இலை, கண்டந்திப்பிலி, மல்லி விதைகள், சீரகம், மிளகு, திராட்சை, மஞ்சள் தூள், சுக்குப்பொடி, வெற்றிலை ✱உலர் திராட்சையை நீரில் ஊறவைக்கவும். வெற்றிலை, கற்பூரவல்லி தனியா, மிளகு, கண்டந்திப்பிலி ஆகியவற்றை நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு, சீரகம், மஞ்சள் தூள், சுக்குப்பொடியுடன் திராட்சையை சேர்த்து மசித்து கொள்ளவும். இதனை வடிகட்டி, தேன் கலந்து குடிக்கலாம். SHARE IT.