News April 15, 2025
சிவகாசியில் மின்சாரம் தாக்கி 3 பேர் பலி: CM ஸ்டாலின் இரங்கல்

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கோயில் விழாவில் ரேடியோ அமைக்கும் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். காரிசேரி கிராமத்தை சேர்ந்த திருப்பதி (27), அவரது மனைவி லலிதா (25), பாட்டி பாக்கியம் (75) நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர். மூவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள CM, அவர்களது குடும்பங்களுக்கு தலா ₹3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
Similar News
News April 19, 2025
இந்த வாரம் முடிவுக்கு வந்த தங்கம் விலை!

தங்கம் விலை இந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த வந்த நிலையில், இன்று (ஏப்.19) மாற்றமின்றி விற்பனையாகிறது. இந்த வாரத்தில் 1 கிராம் 225 ரூபாயும், சவரன் 1,800 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்நிலையில், இன்று மாற்றமின்றி 1 கிராம் ₹8,945-க்கும், ₹71,560-க்கும் விற்பனையாகிறது. நாளையும் இதே விலைதான் என்பதால் ஒரு ஸ்பீடு பிரேக் போடப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?
News April 19, 2025
பலத்த காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

தென்னிந்தியாவின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கிறது. இதனால், தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. அதேநேரம் ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 3 டிகிரி வரை வெயில் அதிகமாக இருக்கும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வெளியே செல்லும் போது குடையோடு போங்க மக்களே.!
News April 19, 2025
இந்த அறிகுறிகள் தெரியுதா.. கல்லீரலில் பிரச்னை இருக்கு!

இன்று கல்லீரல் நாள். கல்லீரல் பிரச்னை இருந்தால், நமது உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்கும். நன்றாக சாப்பிட்டாலும் சோர்வு,
மஞ்சள் காமாலை, அடிவயிற்றின் மேல் வலது பக்கத்தில் வலி அல்லது வீக்கம், வாந்தி, எளிதில் ரத்தப்போக்கு, கால் வீக்கம் அல்லது கால்களில் அரிப்பு போன்ற அறிகுறிகளை அசால்ட்டாக எடுத்துக் கொள்ள வேண்டாம். SHARE IT.