News April 15, 2025
நெல்லை: தவறவிட்ட குழந்தையை உரிமை கோர 30 நாட்கள் கெடு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே மன்னார்புரம் விலக்கு பகுதியில் 3 வயது மதிக்கத்தக்க சிறுமி ஜெசிக்கா பாதுகாப்பற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இந்த குழந்தைக்கு உரிமை கோர விரும்புவோர் உரிய ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களுடன் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் 30 நாட்களுக்குள் அணுக வேண்டும் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 10, 2026
திருநெல்வேலி விபத்தில் தாய், மகன் பலி

வடக்கன்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் இவரது மனைவி கலாவதி(57) மகன் சுடலையாண்டி (34) இருவரும் மாடசாமி என்பவரின் ஆட்டோவில் நேற்று மாலை காவல்கிணறு நாகர்கோவில் சாலையில் பயணித்தனர். அப்போது பின்னால் வந்த சொகுசு கார் ஆட்டோ மீது மோதியது. இதில் கலாவதி, சுடலையாண்டி சம்பவ இடத்திலேயே இறந்தனர். ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்தார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2026
நெல்லையில் அரசு வேலை வேண்டுமா? CLICK and APPLY!

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அம்பை, சேரன்மகாதேவி, மானூர், பாளை, வள்ளியூர் உள்ளிட்ட 9 வட்டாரங்களில் காலியாக உள்ள 22 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. டிகிரி முடித்தவர்கள் கணினி ms- office 3 மாத சான்றிதழ் வகுப்பு பெற்றவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு <
News February 10, 2026
திருநெல்வேலி: போலீஸ் SSIக்கு அரிவாள் வெட்டு!

பணகுடி அருகே செம்பாடு கிராமத்தை சேர்ந்த நந்தகோபால்(52) போலீஸ் எஸ்எஸ்ஐ ஆக பணிபுரிகிறார். இவரது மகளுக்கு திருமணமான நிலையில் கணவன், மனைவி இடையே பிரச்னை உள்ளது. நேற்று மாலை மருமகன் குடும்பத்தினர் நந்தகோபால் வீட்டிற்கு சமாதானம் பேச வந்த போது தகராறு ஏற்பட்டது. மருமகன் சந்தனசெல்வன் நந்தகோபாலை அரிவாளால் தாக்கியுள்ளார். நந்தகோபால அளித்த புகாரில் பணகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.


