News April 3, 2024

வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

image

ரயில் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் மார்ச் மாதம் வரை வியாழக்கிழமைகளில் சென்னை – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. இந்த சேவை பயணிகளின் வசதிக்காக மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை எழும்பூரில் இருந்து ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 25 வரை வியாழக்கிழமைகளில் இயங்கும் என தென்னக ரயில்வே மதுரை கோட்டம் இன்று அறிவித்துள்ளது.

Similar News

News November 18, 2025

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றி பார்க்கலாம்

image

உலக மரபு வார விழா ஆண்டுதோறும் நவ.19 முதல் 25 வரை ஒரு வார காலம் கொண்டாடப்படும். இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னமான மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனையை மேற்கண்ட ஒரு வாரத்திற்கு கட்டணமில்லாமல் சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

திருமலை நாயக்கர் மஹாலை இலவசமாக சுற்றி பார்க்கலாம்

image

உலக மரபு வார விழா ஆண்டுதோறும் நவ.19 முதல் 25 வரை ஒரு வார காலம் கொண்டாடப்படும். இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வரும் நினைவுச் சின்னமான மதுரை, திருமலை நாயக்கர் அரண்மனையை மேற்கண்ட ஒரு வாரத்திற்கு கட்டணமில்லாமல் சுற்றி பார்க்கலாம் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2025

மதுரை மாவட்டத்திற்கு மிக கனமழை!

image

மதுரை மக்களே, அரபிக்கடலை நோக்கி நகரும் புயல் சின்னம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசையில் நகர்வதால், ஈரப்பதம் உள்ளே தள்ளப்பட்டு உள் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. தென் தமிழக மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!