News April 15, 2025
3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்!

சட்டப்பேரவையில் 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி சபாநாயகரிடம் அதிமுக கடிதம் கொடுத்துள்ளது. அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோருக்கு எதிராக இந்த கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பொன்முடி பெண்கள் மற்றும் இந்து மதத்தைக் கேவலப்படுத்தியதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Similar News
News September 17, 2025
அதிக சம்பளம் வாங்கும் தென்னிந்திய நடிகைகள்

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் தெரியுமா? நாம் யாரும் நினைத்தே பார்க்காத ஒருவர் தான் அதிக சம்பளம் வாங்குகிறார். ஆனால் அவர் நயன்தாரா இல்லை. மேலே உள்ள போட்டோக்களை ஒவ்வொன்றாக swipe செய்து பாருங்க. நீங்க யாருன்னு நினைக்கிறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 17, 2025
சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை: அன்புமணி

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு அன்புமணி அஞ்சலி செலுத்தினார். இதன்பின் அவர் பேசுகையில், வன்னியர் இடஒதுக்கீடு பற்றி கவலைப்படாத திமுகவுக்கு, அந்த சமூக மக்களின் வாக்கு மட்டும் வேண்டுமா என்று கேள்வி எழுப்பினார். சமூக நீதி பற்றி பேச திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது என்று சாடிய அவர், 15% இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, டிச.17-ல் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என்றார்.
News September 17, 2025
படி ஏறவே மூச்சுத்திணறும் ‘மின்னல் மேன்’

ஒரு காலத்தில் 100 மீட்டரை 9.58 செகண்டில் ஓடிய உலகின் மின்னல் வேக மனிதன் உசைன் போல்ட், தற்போது மாடிப் படி ஏறவே தான் சிரமப்படுவதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார். 2017-ல் ஓய்வு பெற்றபின், டிவி பார்ப்பது, குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிடுவது என லைஃப்ஸ்டைல் மாறிவிட்டதால், உடற்பயிற்சி செய்வது குறைந்துவிட்டதாகவும் தெரிவித்த அவர், மீண்டும் ஓட்டப்பயிற்சி செய்ய வேண்டும் என நினைப்பதாகவும் கூறியுள்ளார்.