News April 15, 2025

மாநில உரிமைகளுக்காக உயர் நிலைக்குழு: CM

image

மாநில உரிமைகளுக்காக உயர் நிலைக் குழு அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் உரையாற்றிய அவர், மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார். இக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், அடுத்த 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையையும் வழங்கும் என கூறினார். மாநில சுயாட்சியின் முதல் குரல் தமிழகத்தில் இருந்தே ஒலிக்கிறது என்றும் தெரிவித்தார்.

Similar News

News January 16, 2026

BREAKING: தங்கம் விலை குறைந்தது

image

மாட்டுப் பொங்கல் தினமான இன்று(ஜன.16) தங்கம் விலை சவரனுக்கு ₹480 குறைந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹13,230க்கும், சவரன் ₹1,05,840-க்கும் விற்பனையாகிறது. கடந்த 2 வாரத்தில் சவரனுக்கு ₹5,000 வரை உயர்ந்த தங்கம், இன்று குறைந்துள்ளதால், பொங்கல் சீர், சுப முகூர்த்த தினத்திற்கு நகைகள் வாங்க நினைத்தோர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

News January 16, 2026

யாருடன் கூட்டணி: ராமதாஸ் புதிய ஸ்கெட்ச்

image

தொகுதி எண்ணிக்கையைவிட, ராமதாஸை சேர்க்கக்கூடாது என்ற நிபந்தனையுடன்தான், அதிமுக கூட்டணியில் அன்புமணி (பாமக) இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராமதாஸ் யாருடன் கூட்டணி வைப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், அதிமுக கூட்டணியில் அன்புமணிக்கு ஒதுக்கும் தொகுதிகளை விட, கூடுதலான தொகுதிகள் ஒதுக்கீடு செய்தால் திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் ரெடியாக இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

News January 16, 2026

ஜல்லிக்கட்டு நாயகன் கீழையூர் டொங்கான் காலமானார்

image

ஜல்லிக்கட்டு நாயகன்களில் முக்கியமானவரான கருப்பணன்(எ) கீழையூர் டொங்கான் உடல்நலக்குறைவால் காலமானார். 1965-ல் முக்கம்பட்டியில் முதல் ஜல்லிக்கட்டு போட்டியில் களமிறங்கிய அவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக களத்தில் காளைகளை தழுவினார். ஆயிரக்கணக்கான மாடுபிடி, ஜல்லிக்கட்டு வீரர்களை உருவாக்கிய இவர், இத்தாலி நாட்டின் பரிசுகளையும் வென்று அசத்தியுள்ளார். பொங்கல் நாளில் அவரது மறைவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!