News April 15, 2025

மாநில உரிமைகளுக்காக உயர் நிலைக்குழு: CM

image

மாநில உரிமைகளுக்காக உயர் நிலைக் குழு அமைக்கப்படும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் உரையாற்றிய அவர், மாநில உரிமைகளை பாதுகாக்க ஓய்வுபெற்ற நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் குழு அமைக்கப்படும் என்றார். இக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், அடுத்த 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையையும் வழங்கும் என கூறினார். மாநில சுயாட்சியின் முதல் குரல் தமிழகத்தில் இருந்தே ஒலிக்கிறது என்றும் தெரிவித்தார்.

Similar News

News April 19, 2025

கிராம உதவியாளர்களுக்கு குரல் கொடுத்த ஓபிஎஸ்

image

கிராம உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். அரசு ஊழியர்களை போல காலமுறை ஊதியம் வழங்கப்படாததால் கிராம உதவியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதை கவனத்தில் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு கால முறை ஊதியத்தை நிர்ணயம் செய்யவும், பணியின்போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.

News April 19, 2025

வரலாற்றில் இன்று!

image

➤உலக கல்லீரல் தினம்
➤1775 – அமெரிக்கப் புரட்சிப் போர் ஆரம்பித்தது.
➤1975 – இந்தியாவின் முதலாவது செயற்கைக்கோள் ஆரியபட்டா விண்ணுக்கு ஏவப்பட்டது.
➤1957 – முகேஷ் அம்பானி பிறந்தநாள்.
➤போலந்தில் பெரும் இன அழிப்பு நினைவு நாள்.

News April 19, 2025

இந்த செய்தி உண்மையில்லை: அதிமுக மறுப்பு

image

நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றம் தலையீடு கூடாது; அப்படி தலையிட்டால் நீதி பரிபாலன சமன்பாடு குறைந்துவிடும் அபாயம் உண்டு என இபிஎஸ் பேசியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிமுக இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது. சிறுபான்மையினருக்கும், நீதித் துறைக்கும் எதிரான கருத்தை இபிஎஸ் கூறியதாக திமுகவினரால் நியூஸ் பரப்பப்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

error: Content is protected !!