News April 3, 2024

ஆயுள் முழுவதும் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பார்

image

ஆயுட்காலம் முடியும் வரை சிறையில் இருக்கும் அளவுக்கு செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். கரூர் பிரசாரத்தில் பேசிய அவர், செந்தில் பாலாஜியின் பினாமிகள் தமிழகம் முழுவதும் 3,000 பார்களில் கள்ள மதுவை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவில் ஊழல் செய்வதிலும், போதைப் பொருளை விற்பதிலும் தமிழகம் முதன்மை மாநிலமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Similar News

News February 15, 2026

இது CM ஸ்டாலினின் ராஜதந்திரம்: திருமா

image

தேர்தல் நேரத்தில் மகளிர் உரிமைத் தொகை வழங்கக்கூடாது என்று சங்பரிவார் கும்பல் SC-ஐ அணுகிய நேரத்தில், மகளிருக்கு ₹5,000 வழங்கப்பட்டது பாஜகவுக்கு எதிரான ராஜதந்திர நடவடிக்கை என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது மகளிர் மேம்பட வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், திமுகவுக்கு எதிரான தகுதியான கூட்டணி இதுவரை அமையவில்லை என்றும் கூறினார்.

News February 15, 2026

விஜய்யை ஆட்டுவிக்கிறதா ஆந்திரா?

image

ஆந்திர Ex CM ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண நிகழ்வில் விஜய் பங்கேற்றார். அப்போது, தேவையில்லாமல் பாஜகவை சீண்ட வேண்டாம், மாநில தேர்தல் என்பதால் திமுகவை மட்டும் எதிர்த்து அரசியல் செய்யுங்கள் என ஜெகன் கூறினாராம். இதனால்தான், சேலத்தில் பேசிய விஜய், சட்டப்பேரவை தேர்தல் என்பதால் மக்களால் டெலிட் செய்யப்பட்டவர்கள் பற்றி ஏன் பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது. ஒருவேளை இருக்குமோ?

News February 15, 2026

அனைத்து ரேஷன் கார்டுக்கும் தமிழக அரசு WARNING

image

ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு மிக முக்கியமான எச்சரிக்கையை விடுத்துள்ளது. ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் அனைத்து உறுப்பினர்களும் தங்களது கைரேகையை (Biometric) பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று பிப்.25-க்குள் முடிக்குமாறு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. கைரேகை பதிவு செய்யாதவர்களின் ரேஷன் அட்டை முடக்கப்படலாம். SHARE

error: Content is protected !!