News April 15, 2025

உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

image

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

Similar News

News December 29, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

தங்கம் விலை இன்று(டிச.29) 22 கேரட் கிராமுக்கு ₹80 குறைந்து ₹13,020-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ₹640 குறைந்து ₹1,04,160-க்கு விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் கிடுகிடுவென உயர்ந்த தங்கம், இந்த வாரம் சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18699156>>சர்வதேச சந்தையில் தங்கம் விலை<<>> சரிந்து வருவதால் அதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

News December 29, 2025

விஜய்யை கூட்டணிக்கு அழைத்த வானதி சீனிவாசன்

image

NDA கூட்டணியில் இணைய விஜய்க்கு <<18692245>>தமிழிசை<<>> நேற்று அழைப்பு விடுத்திருந்த நிலையில், அவரைத் தொடர்ந்து தற்போது வானதி சீனிவாசனும் அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணி என்பதே பொது எதிரியை வீழ்த்தத்தான் என்ற அவர், திமுகவை சேர்ந்தே வீழ்த்தலாம் என்று விஜய்யை அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பிரிவினையை ஏற்படுத்தும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது எனவும் கூறியுள்ளார்.

News December 29, 2025

மாபெரும் உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

image

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை 4 முறை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். அவர் 2018(1,291 ரன்கள்), 2022(1,290 ரன்கள்), 2024(1,659 ரன்கள்) & 2025-ல்(1,703 ரன்கள்) அதிக ரன்களை விளாசியுள்ளார். யாரும் இச்சாதனையை 2 முறைகூட செய்ததில்லை. மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில்(2024 & 2025) அதிக ரன்களை விளாசிய ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.

error: Content is protected !!